More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • புதுமண தம்பதிக்கு காத்திருந்த பெரும் ஆபத்து - கணவன் பலி - உயிருக்கு போராடும் மனைவி
புதுமண தம்பதிக்கு காத்திருந்த பெரும் ஆபத்து - கணவன் பலி - உயிருக்கு போராடும் மனைவி
Mar 11
புதுமண தம்பதிக்கு காத்திருந்த பெரும் ஆபத்து - கணவன் பலி - உயிருக்கு போராடும் மனைவி

குருணாகலில் காட்டு யானையின் தாக்குதலுக்கு புதுமண தம்பதி இலக்கான நிலையில், கணவன் உயிரிழந்துள்ள நிலையில் மனைவி ஆபத்தான நிலையில் உள்ளார்.



அம்பன்பொல வந்துருஸ்ஸ பிரதேசத்தில் விவசாய காணியை பாதுகாப்பதற்காக காவலுக்கு சென்ற தம்பதியை காட்டு யானை மிகவும் கொடூரமாக தாக்கியுள்ளது.



திருமணமாகி ஒரு மாதமேயான நிலையில், இளம் தம்பதியினர் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.



பொருளாதார நெருக்கடி காரணமாக வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேனை சாகுபடியை விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக இரவில் காவலுக்கு செல்வதனை இந்த தம்பதி வழக்கமாக மேற்கொண்டு வந்துள்ளனர்.



கடந்த 8ஆம் திகதி காவலுக்கு சென்றிருந்த நிலையில், யானை ஒன்று துரத்திச் சென்று வெறுப்புணர்வைத் தணிக்கும் வகையில் தம்பதியினரைத் தாக்கியுள்ளது. அத்துடன் இளைஞனை தூக்கி காட்டு பகுதியில் வீசியுள்ளது.



பெண்ணின் முதுகு பகுதியில் காலினால் யானை மிதித்துள்ளதுடன், இரவு உணவிற்காக கொண்டுவரப்பட்ட பொருட்களை சேதப்படுத்தியுள்ளது.



யானையினால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண் கையடக்க தொலைபேசி ஊடாக வீட்டிற்கு தகவல் வழங்கியுள்ளார்.



அதற்கமைய கணவன் - மனைவியை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் கணவன் உயிரிழந்துள்ளார். மனைவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இயந்திரத்தின் உதவியுடனேயே சுவாசிப்பதாக தெரியவந்துள்ளது.



இந்த சம்பவத்தில் 22 வயதுடைய ஷெஹதன் தெனெத் குமாரசிங்க என்ற இளைஞனே உயிரிழந்துள்ள நிலையில் 20 வயதுடைய மதுஷானி ரத்நாயக்க என்ற பெண் சிகிச்சை பெற்று வருகின்றார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr01

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர்  இராயப்பு யோச

May03

நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொ

Mar07

ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்

Aug28

நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் இன

Mar08

கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஐந்த

Apr06

கடந்த சில மாதமாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் களவாடப்

Jun20

இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்

Mar27


ஹெட்டிபொல - தொலஹமுன பிரதேசத்தில் உள்ள இலங்கை கபடி ச

Feb05

பாடசாலை மாணவி ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயரிழந

Oct19

மஹாபொல உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக

Oct13

பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதி

Apr02

அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன

Aug23

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மர

May29

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்ததையடுத்து க

Mar12

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொருட்கள் ஏற்றுமதி மு