More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரஷ்யா இந்த நாட்டினால் தண்டிக்கப்பட வேண்டும்! உக்ரைன் எம்.பி நம்பிக்கை!
ரஷ்யா இந்த நாட்டினால் தண்டிக்கப்பட வேண்டும்! உக்ரைன் எம்.பி நம்பிக்கை!
Mar 10
ரஷ்யா இந்த நாட்டினால் தண்டிக்கப்பட வேண்டும்! உக்ரைன் எம்.பி நம்பிக்கை!

இந்த நூற்றாண்டின் விதியை தீர்மானிக்க போகும் மிகப்பெரும் சக்தியாக இந்தியா இருக்குமென உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.



உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 14 வது நாளாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. ரஷ்யப் துருப்புகளுக்கு எதிராக தற்போது அங்குள்ள பொதுமக்களும் கைகளில் ஆயுதமேந்தி சண்டையிட்டு வருகின்றனர்.   



இது, ரஷ்ய துருப்புகளின் முன்னேற்றத்தை பல இடங்களில் தடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், ராணுவம் ஒருபுறம், பொதுமக்கள் ஒருபுறம் என இரு முனை தாக்குதலை ரஷ்ய துருப்புகள் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



இதேவேளை, உக்ரைனைச் சேர்ந்த இளம் எம்.பி.யான ஸ்வியாட்டோஸ்லாவ் யுராஷும் (Sviatoslav Yurash) உக்ரைன் ராணுவத்தினருக்கு துணையாக துப்பாக்கியை ஏந்தி களத்தில் இறங்கி சண்டையிட்டு வருகிறார். இதுதொடர்பான செய்திகள் அண்மைக்காலமாக ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் இருந்தன.  



இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது, 



உக்ரைன் நாட்டை அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும் வரை நாங்கள் ஆயுதத்தை கைவிட மாட்டோம். உயிர் இருக்கும் வரை தாய்நாட்டுக்காக போராடுவோம். இந்த போர் சூழலில், உக்ரைனுக்கு பல நாடுகள் உதவி செய்து வருகின்றன.அதில் குறிப்பிடத்தக்க நாடு இந்தியா. உக்ரைன் மக்களுக்காக இந்தியா செய்து வரும் மனிதாபிமானமிக்க உதவிகளை நாங்கள் மறக்க மாட்டோம். இந்த நூற்றாண்டை தீர்மானிக்கப் போகும் சக்தியாக இந்தியா இருக்கிறது.



உக்ரைன் - ரஷ்யா போரில் தாங்கள் எடுத்து வரும் நிலைப்பாட்டை இந்திய மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். உக்ரைன் விவகாரத்துக்காக மட்டுமல்லாமல், ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடின் (Vladimir Putin) கடந்த 20 வருடங்களாக செய்து வரும் மனிதநேயமற்ற செயல்களுக்காக அந்நாட்டுடனான உறவு குறித்து இந்தியா சிந்திக்க வேண்டும். தனது தவறுக்காக ரஷ்யா இந்தியாவால் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep04

ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரரச

Mar19

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்

Feb20

மராட்டிய மாநிலம் நாசிக்கில் ரேசன் பொருட்களை கள்ளச்சந

Sep16

அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் ந

Oct30

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95), கடந்த வாரம் வழக்

Feb01

எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியமான டைக்ரேயின் மு

Dec12

கடந்த நவம்பர் மாத இறுதியில், தென்னாப்பிரிக்காவில் கண்

Aug16

ஆப்கானிஸ்தானில் கடந்த சில தினங்களாக தலிபான்கள் தங்கள

Mar07

ஐ. நா சபையின் ஜெனிவா மனித உரிமைச் சபை அமர்வு ஆரம்பமாகிய

Jan19

உலகின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு பூங்கா வால்ட் டிஸ்ன

Feb24

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா ஓராண்டுக்

Aug21

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறி

May09

கொரோனாவின் 2-வது அலையில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு ஆக

Jun12

 நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் தேவையால், ரஷ்ய

Mar12

நான் உக்ரைனின் அதிபர். 2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்