More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் அனைத்துத் துறைகளிலும் வரவிருக்கும் பேராபத்து!
இலங்கையில் அனைத்துத் துறைகளிலும் வரவிருக்கும் பேராபத்து!
Mar 09
இலங்கையில் அனைத்துத் துறைகளிலும் வரவிருக்கும் பேராபத்து!

நாட்டில் அந்நிய செலாவணி குறைவடைதல், டொலர்களுக்கான தட்டுப்பாடு, மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் இடையூறு ஆகியவற்றால் நாட்டில் அனைத்துத் துறைகளிலும் மிக விரைவில் பெரும் ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக 12 பிரதான தனியார்துறைகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.



நாளை மோசமான விளைவை எதிர்கொள்வதைவிட இன்றே பாது காப்பு ஏற்பாடுகளைச் செய்வது சிறந்ததென அந்தக் கூட்டமைப்பு அரசுக்கு நிலைமையை விபரித்துள்ளது.



கூட்டமைப்பு, ஆடை உற்பத்தியாளர்கள், இளம் தொழில்முனைவோர் சம்மேளனம், சர்வதேச வர்த்தக சம்மேளனம், இலங்கை ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம், நிர்மாணத்துறை சம்மேளனம் உள்ளிட்ட பன்னிரண்டு அமைப்புகள் இது தொடர்பில் அரசாங்கத்தை எச்சரித்துள்ளன.



இதேவேளை, நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலைமையிலிருந்து மீள்வதற்கு தேவையான உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.



நிர்மாணத்துறைக்கு உரிய மூலப்பொருட்களை இறக்குமதிசெய்ய முடியாததன் காரணமாக அந்தத் துறையிலிருந்த 50 ஆயிரம் ஊழியர்கள் தொழிலை இழந்துள்ளதாக நிர்மாணத்துறை சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஸ்ஸங்க என். விஜேரத்ன தெரிவித்துள்ளார்.



இதேவேளை, அந்நிய செலாவணி இருப்பு குறைவடைகின்றமை மற்றும் டொலர் நெருக்கடி காரணமாக பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஆறு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை பாரிய வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகவும் இந்தக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct14

யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இ

Sep17

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ப

Feb03

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கும் புதுப

Feb06

சிலாபம் தும்மலசூரிய யகம்வெல பிரதேசத்தில் உள்ள பள்ளிவ

Feb03

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அமைக்கப்படும் ஐக்கி

Jul25

இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் ந

Sep19

கோழி இறைச்சியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழ

Feb01

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை

Mar13

அண்மையில் புகையிரதத்தில் விட்டுச் செல்லப்பட்ட குழந்

Sep21

மன்னார் மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அற

Apr13

சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் உள்ளிட்ட

Mar31

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில்

Feb10

மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் ந

Mar02

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மு

Apr12

தென்மராட்சி அல்லாரையில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்