காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை நிறைவுக்கு கொண்டு வருவதற்காக 25 விசாரணைக்குழுக்களை நியமித்து துரித வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“2016 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் காணாமல் போ ஆட்கள் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகத்தால் மாத்தறை, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் பிராந்திய அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன் , அப்பிராந்திய அலுவலகங்களுக்கு காணாமல் போனமை தொடர்பான 14 988 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.