More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • நீதித்துறையில் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் முதல் தமிழ் நீதிபதி
நீதித்துறையில் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் முதல் தமிழ் நீதிபதி
Feb 05
நீதித்துறையில் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் முதல் தமிழ் நீதிபதி

இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்யும் முதல் தமிழ் நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறார்.



05.02.1997 நீதிபதியாக நியமனம் பெற்று வவுனியாவில் தனது முதல் நியமனத்தை நீதவானாக ஆரம்பித்து 05.02.2022 அதே வவுனியாவில் மேல் நீதிமன்ற நீதிபதியாக 25 ஆண்டுகள் பூர்த்தி செய்யும் முதல் தமிழ் நீதிபதி என்ற பெருமைக்குரியவர் ஆகின்றார்.



இன்றைய வடக்கு - கிழக்கு மாகாண அனைத்து நீதிபதிகளிலும் 25ஆண்டுகளை பூர்த்தி செய்யும் முதல் பெருமைக்குரிய தமிழ் நீதிபதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.




  • 1999 யாழ். செம்மணி புதைகுழி வழக்கு,

  • 1999 மன்னாரில் காமாலிக்கா கொலை வழக்கு, மடு தேவாலய குண்டு வெடிப்பு வழக்கு, மற்றும் லயன் எயார் குண்டு வெடிப்பு வழக்கு

  • 2000 - 2008 ஒன்பது ஆண்டுகள் கடுமையான யுத்தம் நிலவிய காலப்பகுதியில் வவுனியாவில் நீதிபதியாக கடமையாற்றியமை. ஜெயசிக்குறு தாக்குதல் காலம், யுத்த நிறுத்த காலம், மீண்டும் இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட யுத்த காலத்தில் வவுனியா நீதிபதியாக கடமையாற்றினார்.

  • 2006 வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்கள் கொலை வழக்கு

  • 2008 மேல் நீதிமன்ற ஆணையாளராக நியமிக்கப்பட்டமை

  • 2009 இல் திருகோணமலை கோயில் குருக்கள் மனைவி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கியமை, அந்த கொலை வழக்கு தீர்ப்பு உயர் நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டமை.

  • 2014 கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் 

  • 2015 கணவர் கொலை கொலை வழக்கில் இஸ்லாமிய பெண்ணிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை, தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டமை.

  • 2015 யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்று மூவர் அடங்கிய தீர்ப்பாயத்தில் 1 நீதிபதியாக வித்தியா கொலை வழக்கில் தனித் தீர்ப்பு எழுதி மரண தண்டனை விதித்தமை.

  • 2018இல் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்று யாழ். இளைஞன் கொலை வழக்கில் இரு இராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தமை.

  • 2022இல் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டு, தயா மாஸ்டர் வழக்கில் இரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கி விடுதலை செய்தமை உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.



25 வருட காலப் பகுதியில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்  மேற்குறித்த முக்கிய வழக்குகளுக்கான தீர்ப்புக்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan28

கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிர

Mar27

அமெரிக்காவைச் 24 வயது பெண் ஒருவருக்கு 22 குழந்தைகள் உள்ள

Mar08

பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்

Feb04

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந்

Feb24

அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை

Mar04

ஜப்பானில் சுமார் 1300 ஆண்டுகளாக ஹோட்டல் ஒன்று இயங்கி வரு

Mar08

பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததா

May27

அமெரிக்காவில் நாயின் கழுத்தில் பாய்ந்த அம்பை கால்நடை

Feb11

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மிகவும் பிரபலமா

Feb16

இலங்கையில் வெளிநாட்டவர்கள் தமது திருமண நிகழ்வுகளை நட

Jan15

 மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழு

May04

பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது த

Feb06

உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்

Feb05

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்‍தை முன்னிட்டு அமெரி

Feb09

மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்