More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஏன் ரஞ்சன் விடுதலை செய்யப்படவில்லை?:சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு .......
ஏன் ரஞ்சன் விடுதலை செய்யப்படவில்லை?:சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு .......
Feb 04
ஏன் ரஞ்சன் விடுதலை செய்யப்படவில்லை?:சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு .......

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது சம்பந்தமாக எந்த உத்தரவுகளும் கிடைக்கவில்லை என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.



சுதந்திர தினத்தில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு முழுமையான விடுதலை கிடைக்கும் என தான் நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று கூறியிருந்தார்.



அத்துடன் சுதந்திர தினமான இன்று விடுதலை செய்யப்படும் கைதிகள் பட்டியலில் ரஞ்சன் ராமநாயக்கவின் பெயரை உள்ளடக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.



ஒரு வேளை ரஞ்சனுக்கு விடுதலை கிடைக்காவிட்டால், அதற்காக ஜனநாயக போராட்டத்தை நடத்தி, அவர் விடுதலை செய்யப்படும் வரை போராடப் போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.



ரஞ்சன் ராமநாயக்கவின் முகநூல் பக்கத்தில் நேற்றைய தினம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த பதிவு ஒன்றில் ரஞ்சனை வரவேற்க வெலிகடைக்கு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.



அத்துடன் அவர் இன்றைய தினம் விடுதலை செய்யப்படலாம் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.



இதனிடையே 74 வது தேசிய சுதந்திர தினமான இன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.



மகர சிறையில் இருந்து 20 கைதிகளும், கேகாலை சிறையில் இருந்து 18 கைதிகளும், வெலிகடை சிறையில் இருந்து 17 கைதிகளும், களுத்துறை சிறையில் இருந்து 13 கைதிகளும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.



அத்துடன் வாரியபொல சிறையில் இருந்து 10 கைதிகளும், போகம்பரை மற்றும் மட்டக்களப்பு சிறைகளில் இருந்து 11 கைதிகளும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun02

கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி ந

Aug10

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 18

Oct14

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞான

Sep20

நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்

Jan28

இலங்கையை கடுமையாக சாடும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணை

May25

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஓய்வுபெறும் சட்டமா அதிபர

Jun25

தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை

May17

வரலாறு கண்டிராத மோசமான நிலையை எதிர் கொள்ளப்போகின்றோம

Jun12

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயி

Feb05

கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தி

Feb02

கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ்ப் பட்டயச் ச

Feb12

நீதிமன்ற கட்டமைப்பு அனைத்தையும் டிஜிட்டல் மயப்படுத்

Jan27

தற்போதைய நிலையில், நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு ம

Sep15

எதிர்காலத்தில் அவசர சத்திரசிகிச்சைகளிற்கு தேவையான ம