More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • 500 தாதியருக்கு கொரோனா தொற்று!!!
500 தாதியருக்கு கொரோனா தொற்று!!!
Feb 04
500 தாதியருக்கு கொரோனா தொற்று!!!

அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையாற்றும் சுமார் 500 தாதியருக்கு கோவிட் தொற்றியுள்ளதாக இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.



இவர்களில் கர்ப்பிணி தாய்மார் மற்றும் இரண்டு வயதுக்கும் குறைந்த பிள்ளைகள் இருக்கும் 50க்கும் மேற்பட்ட தாதியர்கள் இருப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மெதவத்த தெரிவித்துள்ளார்.



தேசிய வைத்தியசாலையில் மாத்திரம் 200 தாதியருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதுடன் இவர்களில் 21 பேர் கர்ப்பிணி தாய்மார் எனவும் சொய்சா பெண்கள் மருத்துவனையில் 5 கர்ப்பணி தாய்மார் இருப்பதாகவும் கண்டி வைத்தியசாலையில் நான்கு கர்ப்பிணி தாய்மார் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.



மீண்டும் பரவி வரும் கோவிட் காரணமாக கர்ப்பிணிகளான தாதிமார் மற்றும் பாலுட்டும் தாய்மாரின் நிலைமை பாரதூரமாக மாறக் கூடும் என்பதால், அவர்களுக்கு விசேட விடுமுறை அனுமதியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் மெதவத்த குறிப்பிட்டுள்ளார்.



தொற்றுக்கு உள்ளான தாதிமார் ஒரு வாரத்திற்கு பின்னர் மீண்டும் சேவைக்கு அழைக்கப்படுவதால், தொற்று பரவுவது மேலும் இலகுவாகியுள்ளது.



கோவிட் தடுப்பு வேலைத்திடடம் தற்போது தோல்வியடைந்துள்ளதால், அரசாங்கம் உடனடியாக இது தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar30

யால வன சரணாலயத்தில் அரியவகை கருஞ்சிறுத்தை ஒன்றை சுற்ற

Oct23

22 ஆவது திருத்தும் அமுலாகியுள்ள நிலையில் தற்போது இயங்க

Mar27


ஹெட்டிபொல - தொலஹமுன பிரதேசத்தில் உள்ள இலங்கை கபடி ச

Jan26

ஓட்டுமொத்த தோட்டத்தொழிலாளர் சமூகத்தை இலக்காகக் கொண்

Jun10

வீறு நடைபோட்டு மீண்டும் அரசியல் களத்தில் இறங்கிய ராஜப

Mar02

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல

Apr07

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுக

May25

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஓய்வுபெறும் சட்டமா அதிபர

Jan28

இலங்கையை கடுமையாக சாடும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணை

Sep25

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர

Mar27

இலங்கையில் இன்று (27) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக கொ

Jul25

தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்

Oct03

மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா ந

Sep26

போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால் பொல

Sep20

மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் இன்று முதல் நீத