More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மீனவர் போராட்டத்திற்கு சுமந்திரன்- சாணக்கியன் ஆதரவு; டக்ளஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்...
மீனவர் போராட்டத்திற்கு சுமந்திரன்- சாணக்கியன் ஆதரவு; டக்ளஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்...
Feb 03
மீனவர் போராட்டத்திற்கு சுமந்திரன்- சாணக்கியன் ஆதரவு; டக்ளஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்...

தமிழக மீனவர்களின் அட்டூழியங்களை கண்டித்து யாழில் மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது, சட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரும் போராட்டம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களுக்கு நிரந்தரமான தீர்வு மற்றும் வடமராட்சி கிழக்கு கடலில் இடம்பெற்ற மீனவர்கள் உயிரிழப்புக்கு நீதி ஆகியவற்றை கோரி தொடங்கப்பட்ட போராட்டம் 4ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



இந்தநிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரனும், இரா.சாணக்கியனும் சந்தித்துள்ளனர்.



இதன்போது மீனவர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.



மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது சட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரும் போராட்டம் எனவும், இது சட்டவிரோதமான போராட்டம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், மீனவர்களின் போராட்டத்திற்கு தங்களது ஆதரவு எப்போதும் உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.



இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan20

தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங

Oct13

காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைவதாக ஜனா

Feb03

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கும் புதுப

Aug11

கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பாக ரணில் தெரிவித்த கருத

Oct04

எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் ஏற

Sep19

மனித உரிமைமீறல் துஷ்பிரயோகம் என பல நாடுகள் இலங்கை குற

Jun30

எதிர்காலத்தில் புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பித்த

Mar04

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத

Jan19

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங

Sep28

வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் கிராமத்திற்கு தகவல்

Sep09

இலங்கையில் மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான கொரோனாத்

Jan27

நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையி

Sep24

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்

Jan27

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 4 வருட சிறைத்தண்டன

Aug07

போதுமானளவு குளிர்பதன் வெப்பநிலை இல்லாமல் கொண்டு செல்