More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மர்மமான முறையில் கரை ஒதுங்கிய இலங்கை படகு!உளவுத்துறை தீவிர விசாரணை.
மர்மமான முறையில் கரை ஒதுங்கிய இலங்கை படகு!உளவுத்துறை தீவிர விசாரணை.
Feb 03
மர்மமான முறையில் கரை ஒதுங்கிய இலங்கை படகு!உளவுத்துறை தீவிர விசாரணை.

மன்னார் வளை குடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல் திட்டில் கரை ஒதுங்கிய இலங்கையின் மர்மப் படகு குறித்து உளவுத்துறை கடலோர காவல் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



தனுஷ்கோடி அருகே இரண்டாம் மணல் திட்டில் இலங்கை பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக கடந்த 29/01/2022 இரவு தனுஷ்கோடி பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் மெரைன் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.



இதனையடுத்து அங்கு சென்ற மெரைன் பொலிஸார், உளவுத்துறை மற்றும் சுங்கத் துறையினர் படகை மீட்டு இரவு கரைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.



இதன்போது மீட்கப்பட்ட பைபர் படகு இலங்கை புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட வெள்ளை மற்றும் சிவப்பு கலரில் இருந்துள்ளது.



படகில் யாரேனும் ஊடுருவினார்களா? அல்லது கடத்தலுக்கு பயன்படுத்த வந்ததா ? அல்லது காற்றின் சீற்றத்தில் கரை ஒதுங்கியுள்ளதா என்பது குறித்து பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



படகில் இன்ஜின் பொருத்தப்படும் இடம் சேதமடைந்தும், படகில் மீன்பிடி உபகரணங்கள் இல்லாமல் இருந்ததாக தெரிவித்த பாதுகாப்பு அதிகாரிகள் மீட்கப்பட்ட பைபர் படகை சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar07

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்

Sep23

இந்தியாவும் இலங்கையும் இரு நாடுகளுக்கும் இடையே முன்ம

Aug14

இலங்கையில் போரின்போது காணாமல்போனதாக கூறப்படுவோரில்

Mar10

வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்த

Mar21

எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே

Feb04

தெற்கு கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளி மண்ட

Jul15

அரசியல் கட்சிகளின் தேவைக்கேற்ப, அவர்களின் வழிகாட்டலு

May04

இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சிய

Sep27

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு முழுமை

Aug16

புதிய காவல்துறை காவல்துறை ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட கா

Jul07

கைதுசெய்யப்பட்ட ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப

May01

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநா

Oct14

யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்த

Jun08

இலங்கையில் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபட வேண்டாம் என எ

Feb02

இலங்கையின் சுதந்திர தினமான  எதிர்வரும் நான்காம் திக