More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அதிகரிக்கும் மரணங்கள்! எரியூட்டும் சுடலை இன்றி திண்டாடும் மக்கள்
அதிகரிக்கும் மரணங்கள்! எரியூட்டும் சுடலை இன்றி திண்டாடும் மக்கள்
Feb 02
அதிகரிக்கும் மரணங்கள்! எரியூட்டும் சுடலை இன்றி திண்டாடும் மக்கள்

திருகோணமலை பொது மயானத்தில் பொருத்தப்பட்டிருந்த எரியூட்டும் சுடலை பழுதடைந்துள்ளதால் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.



நாட்டில் தற்போது கோவிட் 19 தொற்று அதிகரித்து வரும் வேளையில் மரணங்களும் அதிகளவில் சம்பவிக்கின்றன.



ஆனாலும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கோவிட்  தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலத்தை பொலநறுவை பிரதேச தனியார் வாகனங்களில் கொண்டு சென்று எரியூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.



திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் திருகோணமலை நகராட்சி மன்றத்தினால் கண்காணிக்கப்பட்டு வந்த இந்த எரியூட்டும் சுடலை பல நாட்களாக சேதமடைந்து காணப்படுவதாகவும் இதனை புனரமைப்பதற்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.



 



ஆனாலும் திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய்-திருகோணமலை போன்ற இடங்களில் எரியூட்டும் சுடலை இருந்தபோதிலும் இரண்டு இயந்திரங்களும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் இதனால் சடலங்களை எரியூட்டுவதற்கு வவுனியா அல்லது பொலநறுவை போன்ற பிரதேசத்திற்கு கொண்டு செல்வதாகவும் இதனால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.



ஆகவே திருகோணமலை நகர சபையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன எரியூட்டும் சுடலையை மிக விரைவாக புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar18

முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழரசு கட்சியின் மத்திய ச

Jun06

  நாட்டில் பணிஸ் ஒன்றின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க

Feb01

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த உயிரியல் பூங்க

Jun14

பாடசாலைகளை கோயில்களிலும், மர நிழல்களிலும் மீண்டும் ஆர

Mar07

 நாடு முழுவதும் எரிவாயு, கோதுமை மா தட்டுப்பாடு மற்று

May03

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின

Sep19

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட

May03

இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 200 மில்லிய

Jun26

ஒருமித்த நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை

Mar11

கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித

Mar08

நாட்டில் இன்றைய தினமும்(8.03) சில வலயங்களுக்கு ஏழரை மணிநே

Feb11

திக்வெல்ல - பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில்

Feb01

வளவை ஆற்றில் நீராட சென்ற நிலையில், பாடசாலை மாணவி ஒருவர

Apr16

வவுனியா மாகாண பொது வைத்தியசாலையினை போதனா வைத்தியசாலை

Feb22

கொழும்பு துறைமுகத்தில் இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல