More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கை தொடர்பில் அமெரிக்காவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
இலங்கை தொடர்பில் அமெரிக்காவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
Feb 02
இலங்கை தொடர்பில் அமெரிக்காவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட வடகொரியாவிடமிருந்து கறுப்பு பணத்தைக் கொண்டு ஆயுதம் வாங்கியதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



இவ்வாறு அவர் கூறியதை அமெரிக்கா போன்ற நாடுகள் கவனிக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை வலியுறுத்தியுள்ளார்.



இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,



நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, தாங்கள் வடகொரியாவில் இருந்து கறுப்பு டொலர்களைப் பயன்படுத்தி யுத்தத்திற்கு ஆயுதங்கள் பெற்றுள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஒரு நாட்டின் நிதி அமைச்சர் எவ்வாறு இவ்வாறானதொரு கருத்தைச் சொல்ல முடியும்?



பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஒருநாட்டில் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி ஆயுதம் வாங்கி இந்த யுத்தத்தை நடாத்தியதாகச் சொல்லுகின்றார்கள். இனிவரும் காலங்களில் இன்னும் இன்னும் எத்தனை உண்மைகளை நாங்கள் அறியக் கூடியதாக இருக்குமோ தெரியவில்லை.



இந்த கருத்தைக் கொண்டு கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில் அவரை முதலில் விசாரணை செய்ய வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகள் இதனைக் கவனிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar04

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தான் விரும்பியவாறு ஜனாதிப

Feb06

தலவாக்கலை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி நபர்

Jul30

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக ம

Jun23

வடக்கு, கிழக்கில் எந்தவொரு பகுதியையும் தமிழ் மக்களின்

Oct13

வன இலாகாக்குரிய காணியாக இருந்தாலும் அக் காணிககளை அமைச

Sep20

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாய

May13

இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் ரூபாவ

Mar06

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து வெள

May28

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (28-05-2022) என்னவென்று தெரிந்

Oct08

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுவ

Mar15

இலங்கைக்கு தொடர்ந்தும் கடன் வழங்குவதை தவிர்ப்பது குற

Mar13

பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக

Mar10

பதுளை - மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் விசேட தேவையுடைய ஒர

Feb03

மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும

Oct15

சுகாதாரம், ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை