More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • காணாமல் போன மாணவர் வாழைச்சேனை பொலிஸாரால் கண்டுபிடிப்பு; பெற்றோர் மகிழ்ச்சி
காணாமல் போன மாணவர் வாழைச்சேனை பொலிஸாரால்  கண்டுபிடிப்பு; பெற்றோர் மகிழ்ச்சி
Feb 02
காணாமல் போன மாணவர் வாழைச்சேனை பொலிஸாரால் கண்டுபிடிப்பு; பெற்றோர் மகிழ்ச்சி

காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த 17 வயதுடைய மன்சூர் அன்ஸப் மாணவனை கண்டுபிடித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.



கடந்த 28 ஆம் திகதி வீட்டை விட்டு சென்றிருந்த குறித்த மாணவன், வீடு திரும்பாததால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர். காணாமல் போன மாணவனின் சென்றிருந்த சைக்கிளும் அவர் அணிந்திருந்த சேர்ட் மற்றும் பாதணிகள் போன்றவை பாசிக்குடா - கல்மலை கடலோரத்தில் இருந்து மறுநாள் 29ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டது.



இதனையடுத்து மாணவனின் பொருட்களை கண்டு கொண்ட பெற்றோரும், பிரதேச மக்களும் மாணவன் நீரில் மூழ்கி மரணமடைந்திருக்கலாம் எனும் சந்தேகத்தில் பொலிஸாரின் உதவியுடன் சுழியோடிகள் மாணவரை தேடும் நடவடிக்கையில்  ஈடுபட்டனர்.



இந்த நிலையில், மாணவன் வீட்டை விட்டு வெளியேறும் போது சில ஆடைகளையும், அவரிடமிருந்த சிறிதளவு பணத்தையும், தேசிய அடையாள அட்டை மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவைகளை எடுத்துச் சென்றுள்ள விடயம் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.



தொடர்ந்து மாணவனின் கைத்தொலைபேசி பாவனையில் இருந்ததை அவதானித்த பொலிஸார், மாணவன் தலைமறைவாகி இருக்கலாம் எனும் சந்தேகத்தில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.



இதனையடுத்து ஐந்து நாட்களின் பின்னர் நேற்றுமாலை வவுனியா பகுதியில் வைத்து கண்டுபிடித்துள்ளனர். வீட்டில் ஏற்பட்ட முரண்பாடு ஒன்றின் காரணமாகவே தான் வீட்டை விட்டு வெளியாகியதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது மாணவன் வாக்கு மூலம் வழங்கியுள்ளான்.



பெற்றோரை திசை திருப்பவே கடலோரம் சைக்கிளையும் அணிந்திருந்த சேர்ட்டையும் வைத்து விட்டு யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பஸ் வண்டியில் வவுனியா சென்றுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது. தொடர்ந்து மாணவனை பொலிஸார், பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug07

ஆசிரியர் அதிபர்களின் வேதனப் பிரச்சினைகள் முரண்பாடுக

Sep24

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்

Apr01

யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத

Jul26

வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் பணியாறும் விய

Oct22

இந்த வருடத்தின் கடந்த 8 மாத காலப்பகுதியில் சிறுவர் துன

Jan31

வவுனியாவில் பொதுஜன பெரமுனவின் பேராளர் மாநாடு இன்றையத

Oct15

கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மற

Aug09

கொவிட் தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை

Feb18

பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித ம

Feb09

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை

Jan26

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்

Oct04

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15000 ரூ

Jan31

உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் அகழ்வாராய்ச்சி

Oct08

முட்டைக்கான தற்போதைய அதிகபட்ச சில்லறை விலையில் திருத

Oct23

பொதுமக்களின் பிரச்சினைக்கு இந்த அரசிடம் தீர்வு ஏதுமி