More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு என்ன நடந்தது?:வழங்கும் தகவல்களில் முரண்பாடுகள்!
அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு என்ன நடந்தது?:வழங்கும் தகவல்களில் முரண்பாடுகள்!
Jan 29
அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு என்ன நடந்தது?:வழங்கும் தகவல்களில் முரண்பாடுகள்!

 அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக தற்போது வெளியிடும் தகவல்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பாடாக இருந்து வருவதை காண முடிகிறது.



பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கில் இருந்து அவரது தனிப்பட்ட செயலாளராகவும் அண்மைய காலமாக நாடாளுமன்ற விவகார செயலாளராகவும் கடமையாற்றிய உதித் லொக்கு பண்டார,( Udith lokubandara) கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்த விடயம் பகிரங்கமான செய்தி.



எனினும் அப்படியான சம்பவம் நடந்தது தனக்கு தெரியாது என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார். சாதாரணமாக தந்தையின் பணத்தை புதல்வர்களே எடுப்பார்கள் என்பதால், வேறு ஒருவர் இவ்வாறு பணத்தை எடுத்தமை சம்பந்தமாக தான் அறியாத விடயத்தை விசாரித்து பார்க்க வேண்டும் என நாமல் பகிரங்கமாக ஊடகங்களிடம் கூறியிருந்தார்.



எவ்வாறாயினும் பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்ததை உதித் லொக்கு பண்டார தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். உதித் லொக்கு பண்டார, நாமல் ராஜபக்சவுக்கு மிக நெருக்கமான நண்பர்.



அத்துடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய சம்பவத்தையும் அமைச்சர் நாமல் ராஜபக்ச மறுத்திருந்தார். தனது தந்தை நோயாளி ஒருவரை பார்க்க வைத்தியசாலைக்கு சென்றதாகவும் அப்படி சென்ற தந்தை ஊடகங்கள் நோயாளியாக மாற்றியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.





எனினும் பிரதமரின் மூத்த சகோதரர் அமைச்சர் சமல் ராஜபக்ச, (Chamal Rajapaksa) பிரதமர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார்.



கம்பளை நாரான்விட ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரையில் புத்தர் சிலை ஒன்றை திறந்து வைக்கும் சந்தர்ப்பத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டார். பிரதமர் திடீர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதால், அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள முடியாது போனது என சமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.



உதித் லொக்கு பண்டார வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை பிரதமர் சத்திர சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது தெரியவந்துள்ளது.எடுத்தது பற்றிய விடயம் 



அமைச்சர் நாமல் ராஜபக்ச இவ்வாறு பொய்யான தகவல்களை ஊடகங்களிடம் கூறிய இந்த இரண்டு சம்பவங்களும் சில தினங்களுக்கு முன்பே நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct04

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக

Jun01

யாழ்ப்பாண  பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்ட

Mar08

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக நகல் எ

Mar05

பேராதனை வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் பயணித

May04

 யாழ்.பருத்துறை துன்னாலை - குடவத்தை பகுதியில் உள்ள கோ

Feb06

கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின்

May14

மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத் தடைகளை மீறிச் செயற்ப

Aug19

என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான ந

Sep22

யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள்

Mar18

முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழரசு கட்சியின் மத்திய ச

Dec17

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத

Sep19

தாமரை கோபுரம் திறக்கப்பட்ட 15ஆம் திகதி முதல் நேற்று வரை

Feb03

ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள்

Oct08

யாழ். பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

Jan11

நாட்டில் சில பிரதேசங்களில் மெழுகுவர்த்திகளுக்கு தட்