துருக்கி மால் ஒன்றில், செல்போன் பார்த்தப்படியே நடந்துக்கொண்டிருந்த இளைஞர், திறந்துகிடந்த துளையின் வழியாக கீழே விழுந்துள்ளார்.
இச்சம்பவம் அங்கிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளது.
அதில், துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள ஒரு மாலில், செல்போனை பார்த்துக்கொண்டே ஒரு இளைஞன் நடந்து செல்வதை காண முடிகிறது.
முழு கவனத்தையும் செல்போன் மீது வைத்திருந்த இளைஞர், திறந்து கிடந்த துளையை கவனிக்காமல் அதன் மீது கால் வைத்திட, சட்டேன கீழ் தளத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால், கீழ் தளத்தில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள பாக்ஸ்கள் மீது விழுந்ததால், நல்வாய்ப்பாக காயமின்றி தப்பித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி, செல்போனால் ஏற்படும் கவனக்குறைவு தொடர்பாக மீண்டும் ஒருமுறை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.