More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும்" - சசிகலா வேண்டுகோள்...
நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும்
Feb 19
நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும்" - சசிகலா வேண்டுகோள்...

ஆளும் கட்சி அராஜகம் செய்யாமல் நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார்.



தமிழகத்திலுள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.  அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின், திமுக எம்எல்ஏ உதயநிதி, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,  மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், அமைச்சர் கே.என்.நேரு , பொன்முடி , துரைமுருகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இன்று வாக்களித்தனர். அத்துடன் நடிகர் விஜய், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரை பிரபலங்களும் தங்கள் வாக்கினை செலுத்தினர்.



இந்நிலையில் தியாகராயநகர் வித்யோதயா பள்ளி வாக்குச் சாவடியில் உள்ள வாக்கு மையத்தில் வி.கே. சசிகலா இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.  அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக வாக்களிக்கிறேன். இது மிகவும் கஷ்டமான சூழலாக உள்ளது. ஆளும் கட்சியின் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். அராஜகம் செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். அத்துடன் காவல்துறையினரும், நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்திய சசிகலா , அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தால் மட்டும் போதாது ; நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb26

புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கி

Sep23

பஞ்சாப் மாநில ஆளும் காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி பூசல

Jan18

பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை அதிகளவில் இருக்க

Sep05

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு

Feb25

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மீண்டும் மெதுவாக வேகம

Sep20
Dec11

திருப்பதி ஏழுமலையானுக்கு 5.3 கிலோ எடை கொண்ட  தங்கக்

Jan03

பஞ்சாப் மாநிலத்தை ஜலந்தரை சேர்ந்த மலிகா ஹண்டா, தேசிய ம

May04

வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகின்ற வெள்ளிக்கி

Oct17

காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவ

Sep06

கோழிப் பண்ணை தீவனத்தில் முக்கிய மூலப்பொருளாக விளங்கு

Feb01

தமிழகத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ள 1.03 இலட்சம் கோடி ரூ

Mar31

இந்தியாவின் மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் ஜாவ்ரா. இவரு

Jun25

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் ப

Jun30

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்