More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • போர் பதற்றம் உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
போர் பதற்றம்  உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
Feb 15
போர் பதற்றம் உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. 



உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது என்கிற ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நிராகரித்துவிட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.



உக்ரைன் எல்லையில் ரஷியா சுமாா் 1 லட்சம் படை வீரர்களையும், போர் தளவாடங்களையும் குவித்துள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனை ரஷியா மறுத்து வருகிறது.



உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது. மேலும் பல நாடுகள் உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு தூதர்களை திரும்ப பெற்றதுடன், தங்கள் நாட்டு மக்களையும் உடனே நாடுதிரும்ப வேண்டும் என எச்சரித்துள்ளன.



இந்த நிலையில், உக்ரைனில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக அந்நாட்டில் இருக்கும் இந்தியர்கள் உடனே வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள், தங்கள் நிலை மற்றும் இருப்பிடங்களை உக்ரைன் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



மேலும், உக்ரைனுக்கு இந்தியர்கள் யாரும் செல்லவேண்டாம் எனவும் மத்திய அரசு தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May22

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட ஆக்க

Sep20

உக்ரைனுக்கு 2023 ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் ப

Jan19

அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய

Mar10

பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை தந்தை சுட்டுக்கொன

Mar01

அரபிக்கடலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கி

Feb18

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் இந்திய அளவில் க

Feb27

நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உ

May20

மரியுபோல் இரும்பு ஆலையில் சிக்கிய நிலையில் ரஷ்ய இராணு

Apr17

கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை உக்ரைன் அழித்ததைய

Apr11

 உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளது. ரஷியா உடனான இந

Mar26

அமெரிக்காவில் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படு

May28

உள்நாட்டு போரால் திணறும் சிரியாவில் நேற்று முன்தினம்

Jul24

திபெத் நாட்டுக்கு சீனா உரிமை கோருவது மட்டுமின்றி, அதை

Apr04

ரஷ்யாவில் கடந்த 2012-ம் ஆண்டு சமூக வலைதளங்களில் சர்ச்சைக

Mar30

மதிப்பிலான சரக்குகளுடன் மலேசியா வழியாக நெதர்லாந்து ந