More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதல்- சர்ச்சைக்குள்ளான சரத் வீரசேகரவின் மகனின் முகநூல்ப் பதிவு!
ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதல்- சர்ச்சைக்குள்ளான சரத் வீரசேகரவின் மகனின் முகநூல்ப் பதிவு!
Feb 15
ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதல்- சர்ச்சைக்குள்ளான சரத் வீரசேகரவின் மகனின் முகநூல்ப் பதிவு!

இலங்கையில் பிரதான தொலைக்காட்சி செய்திகளில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்ட சம்பவம் ஒன்றை சரத் வீரசேகரவின் மகன் கேலி செய்துள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள உணர்வுகளை அவர் கேலி செய்துள்ளமை சம்பவத்தை அலட்சியமாக புறக்கணிக்கும் செயல் என பல தரப்பினர் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.



இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 



ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட கல் மற்று மல கழிவு வீச்சு தாக்குதலை கேலி செய்யும் வகையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் மகன் தனது முகநூலில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.



“கற்கள் மற்றும் மல கழிவுகளை அவமதித்தவர்களை கண்டிப்போம்” என சிங்களத்தில் அவர் இந்த பதிவை இட்டுள்ளார். அமைச்சர் வீரசேகரவின் மகன் சசித்திர வீரசேகர, காவல்துறை திணைக்களத்தில் ஒரு மருத்துவராக கடமையாற்றி வருகிறார்.



இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு காவல்துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலைமையில், காவல்துறை திணைக்களத்தின் மருத்துவ காவல்துறை அதிகாரியான சசித்திர வீரசேகர இவ்வாறான பதிவை இட்டுள்ளமை விசனத்திற்குரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சமுதித்த சமரவிக்ரம, சமூக ஊடகங்கள் மூலம் வெளியிட்ட ஊழல், மோசடிகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் சம்பந்தமான நேர்காணல் ஒளிப்பரப்புகள் , பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணம் என ஊகிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் அமைச்சர் வீரசேகரவின் மகன், தனது முகநூல் பதிவை தற்போது நீக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct16

மட்டகளப்பில் நேற்று மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அட

Jan30

இலங்கைக்குள் தற்போது 500000 சீனர்கள் இருக்கின்றனர்.அவர்க

Sep30

யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11

Jan29

வவுனியா காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று (29) காலை இடம்

Sep27

இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்

Jun25

எமது பூர்வீகம் இல்லாது ஒழிக்கப்படும் சூழ்நிலை இந்த நா

Sep17

உணவுபொதி ஒன்றின் விலை 450 ரூபாயைத் தாண்டியதால்இ உணவகங்க

Feb20

அராலி, யாழ்ப்பாண கல்லூரி மைதானத்திற்கு அருகில் இடம்பெ

Sep30

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி

Sep05

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத

Jun10

வவுனியா சாந்தசோலை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த ச

Apr01

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசே

Jan25

2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை விசா

Oct20

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செ

Jan28

அமைச்சர் நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக