More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் - கனேடிய மாகாண முதல்வர்
லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் - கனேடிய மாகாண முதல்வர்
Feb 13
லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் - கனேடிய மாகாண முதல்வர்

லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் எனவும், அவசர நிலை பிரகடம் தேவை இல்லை எனவும் ஆல்பர்ட்டா மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார்.



தடுப்பூசி கட்டாயம் என்ற பெடரல் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு எதிராக லொறி சாரதிகள் நாடு முழுவதும் பல மாகாணங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



தலைநகர் ஒட்டாவாவில் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டம், நகர நிர்வாகத்தால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் படிப்படியாக வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டது.



இதனிடையே லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டங்களை தடுக்கும் நோக்கில் ஒன்ராறியோவில் மாகாண நிர்வாகத்தால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க தாங்கள் தயாரில்லை எனவும், தங்களிடம் வலிமையான சட்ட விதிகள் அமுலில் இருப்பதாகவும் ஆல்பர்ட்டா மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார்.



ஞாயிறன்று இது தொடர்பில் விளக்கமளித்துள்ள முதல்வர் Jason Kenney, தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான சட்டங்கள் மாகாணத்தில் ஏற்கனவே உள்ளன என்றார்.



ஏற்கனவே ஒன்ராறியோவை விட வலுவான சட்டங்கள் உள்ளன. இதுபோன்ற சூழலில் பொலிசாருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் சட்டங்கள் கடந்த ஆண்டே நிறைவேற்றப்பட்டுள்ளது.



இதனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என்பது மட்டுமின்றி சிறைத்தண்டனை அளிக்கும் அதிகாரம் உட்பட காவல்துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.



மாகாணத்திற்கு இழப்பு ஏற்படுத்தும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என முதல்வர் Jason Kenney எச்சரிக்கை விடுத்துள்ளார்.  



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar17

சீனாவின் வுகான் நகரில் 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப

Jul31

அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலி

Dec26

சமாதானமான நாடு ஒன்றில் வாழக் கிடைத்தமையினால் கனேடிய ம

Mar13

ரஷ்யாவுடனான போரில் இதுவரை 1300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந

Jul18

ஆப்கானிஸ்தானில் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான

Apr24

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உ

May21

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தி இளவரசி

Mar15

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் உக்ரைன் மீதான போர்

Oct14
Apr08

உக்ரைன் நாட்டை மிக விரைவாக கைப்பற்றி, கீவ் தலைநகரை மிக

Mar06

உக்ரைனுக்கு ஆதரவாக போரில் கலந்து கொல்வதற்காக ராணுவத்

Feb28

சீனா உக்ரைன் - ரஷ்ய போரை முன்மாதிரியாகக் கொண்டு தற்போத

May20

கடந்த சில தினங்களுக்கு முன் அல் ஜசீரா ( Al Jazeera) செய்தி நிறு

Mar02

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்

Mar03

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா, மற