More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் அனுராதபுரத்தில்!
பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் அனுராதபுரத்தில்!
Feb 09
பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் அனுராதபுரத்தில்!

பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் இன்று (09 ஆம் திகதி) அநுராதபுரத்தில் நடைபெறுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற இருப்பதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.



அமைச்சர்கள், எம்.பிகள் கட்சி அமைப்பாளர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக முதலாவது கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கான முன்னெடுப்புகள்,கொவிட் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகள். மின்சார நெருக்கடிக்கான தீர்வு உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் மக்களை அறிவூட்ட இருப்பதாகவும் கட்சி தகவல்கள் தெரிவித்தன.



இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பசில், விரைவாக தேர்தல் நடத்துவதையே பொதுஜன பெரமுன எதிர்பார்க்கிறது , எந்த நிமிடமும் தேர்தல் நடத்துவதையே தானும் விரும்புவதாக குறிப்பிட்ட அவர் கொரோனா தொற்று காரணமாக தேர்தல் செயற்பாடுகள் பின்போடப்பட்டாலும் மீண்டும் அதனை ஆரம்பிக்கும்  வகையில் நாடுமுழுவதும் பிரசார கூட்டங்களை நடத்த இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.



அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலையோ பொதுத் தேர்தலையோ அவசரமாக நடத்த முடியாது. மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை கடந்த அரசு குழப்பி வைத்துள்ளதால் அந்த தேர்தலையும் நடத்த இயலாது. உள்ளூராட்சி தேர்தலை மாத்திரம் தான் நடத்த முடியும். ஒரு வருடத்தினால் உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாலும் தேர்தல் நடத்துவதையே நாம் விரும்புகிறோம். எமது கட்சித் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் தேர்தல் நடத்துவதையே விரும்புகிறார்.பாராளுமன்ற தேர்தலை இரண்டரை வருடங்கள் வரை நடத்த முடியாது. ஜனாதிபதி தேர்தலையும் முன்கூட்டி நடத்த இயலாது என்றும் அவர் தெரிவித்தார்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep28

நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,

Jul14

முல்லைத்தீவு, புத்துவெட்டுவான் கிராமத்தில் 14 வயது சிற

Jan24

இலங்கையில் மேலும் 724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ள

Jun10

வவுனியா சாந்தசோலை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த ச

May09

காலி முகத்திடலில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போர

Feb02

சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு

Oct05

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா

Sep26

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண

Feb14

இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடால், அதிகரித்த

Feb09

சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல்வேறு கடுமையான தீர

Oct17

வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலை

Oct16

நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவச

Jan20

பாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணை

Jul01

அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அ

Jun08

எவ்வித காரணங்களும் இல்லாமல் கொழும்பு நகருக்குள் நேற்