More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மீண்டும் திடீரென அதிகரிக்கப்பட்ட எரிபொருளின் விலை! புதிய விலைப் பட்டியல் இதோ
மீண்டும் திடீரென அதிகரிக்கப்பட்ட எரிபொருளின் விலை! புதிய விலைப் பட்டியல் இதோ
Feb 06
மீண்டும் திடீரென அதிகரிக்கப்பட்ட எரிபொருளின் விலை! புதிய விலைப் பட்டியல் இதோ

லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.



இதன்படி, ஒரு லீற்றர் டீசலின் விலையை 3 ரூபாவாலும், ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் விலையை 7 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.



177 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் புதிய விலை 184 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



மேலும், 121 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் டீசலின் புதிய விலையாக 124 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  



பொருளாதார நெருக்கடிக்குள் நாடு சிக்கியுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த வழிகள் இன்று சமகால அரசாங்கம் திணறி வருகிறது.



இந்நிலையில் நாளாந்தம் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இன்றைய தினமும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.



அதனை கட்டுப்படுத்த அரசினால் முடிவில்லை. இதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது பெற்றோலின் விலைகள் மிகவும் குறைவான மட்டத்திலேயே பேணப்பட்டு வந்தன.



அப்போதைய எதிர்க்கட்சியான இருந்த சமகால அரசாங்க தரப்பினர், எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்திற்கு சைக்கிள் மூலம் சென்றிருந்தனர்.



இதில் சமகால பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அமைச்சர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep19

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 ப

Jun08

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்த

Jan19

நாட்டில் ஒட்சிசன் தேவையுடைய கொரோனா தொற்றாளர்கள் எண்ண

Jul30

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக ம

Sep17

நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சிகள் முதல் சிறுபான்ம

Mar25

தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும

Feb21

டெங்கு வைரஸின் அறிகுறிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக

Jun30

இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை ச

Feb12

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்று

Sep20

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்று

Feb21

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று இலங்கைக்கு திரும்ப ம

Apr30

அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கை பொறியியலாளர்

Apr07

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுக

Aug18

நாட்டில் தற்போது நாளாந்தம் சுமார் 30 – 40 சுகாதார ஊழியர

Mar12

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது சற்று செயலற்ற நிலையில்