More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மதுரையில் காரில் கடத்திய போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் – 10 பேர் கைது!..
மதுரையில் காரில் கடத்திய போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் – 10 பேர் கைது!..
Sep 23
மதுரையில் காரில் கடத்திய போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் – 10 பேர் கைது!..

மதுரைக்கு காரில் மூட்டை மூட்டையாக கலர் ஜெராக்ஸ் எடுத்த ரூபாய் நோட்டுக்களை கடத்திவந்த 10 பேரை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.



மதுரை மாவட்டம் கள்ளிக்குடி சோதனைச்சாவடியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வழியாக சந்தேகத்திற்குரிய வகையில் வந்த 2 கார்களை மறித்து சோதனை நடத்தினர். அப்போது, கார்களில் ரூ.2000, ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு 3 பைகளில் கட்டுக்கட்டாக கொண்டு சென்றது தெரியவந்தது.



இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், 2 கார்களில் வந்த கோவையை சேர்ந்த அக்பர், ஈரோடு சரவணன், மதுரையை சேர்ந்த அன்பு, கேரளாவை சேர்ந்த டோமி தாஸ், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த தண்டீஸ்வரன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து காவலர் உடை, போலி ரூபாய் நோட்டுகள் மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar10

யேமனில் கேரளாவைச் சேர்ந்த தாதிக்கு மரண தண்டனை கொடுக்க

Aug10

பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை

Jul17

சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ள

Feb24

 மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் ப

Mar14

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

Sep13