More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு!.
ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு!.
Sep 23
ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று மாலையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இறுதிநாளில் அரசியல் கட்சியினர் ஆர்வமுடன் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.



தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் கடந்த 2019ஆம் ஆண்டு நிரப்பப்படாத பதவி மற்றும் பதவி ராஜினாமா, இறப்பு போன்ற காரணத்தால் காலியாக உள்ள பதவிகளுக்கு மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இறப்பு, ராஜினாமா உள்பட பல்வேறு காரணங்களால் 27 பதவிகள் காலியாக உள்ளது. இந்த 27 பதவிகளுக்கு வரும் அக்டோபர் 9ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.



இதன்படி, அம்மாபேட்டை ஒன்றியத்தில் மாவட்ட பஞ்சாயத்து வார்டு எண் 5, ஈரோடு ஒன்றிய கவுன்சிலர் வார்டு எண் 4, பெருந்துறை ஒன்றிய கவுன்சிலர் வார்டு எண் 10, முகாசிபுலவன்பாளையம், சங்கராபாளையம், கூடக்கரை, கருக்குபாளையம் ஆகிய 4 இடங்களில் பஞ்சாயத்து தலைவர் பதவி மற்றும் 20 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 27 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. இதனையொட்டி, நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வந்தது.



நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் தேர்தலில் போட்டியிட 43 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதனால் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் அலுவலகங்கள் அனைத்தும் பரபரப்பாக காணப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடக்கும், 27 பதவிகளுக்கு 82 ஆயிரத்து, 171 பேர் வாக்களிக்க உள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct14

மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசு கப்பலில் ப

Oct04

உத்தர பிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர், மாநில துணை முத

Jul16

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய தகவல் தொழில்ந

Aug22

வேளாண் நிதிநிலை அறிக்கை அளித்தோம் என்று மார் தட்டி கொ

Jun25

சுகாதாரத்துறை 

சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ள கேரளாவில் காங்கிரசி

Apr22

கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை

May30

கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை எனவும், பெண்கள் தன்னம

Jan19

குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் காட்

Jun19

மேற்கு வங்காள மாநிலம் நந்திகிராம் தொகுதியில் முதல்வர

Apr02

ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் சுமார் 400 பேருக்கு

Sep25

தமிழகத்தில் மேலும் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய

Mar29

பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, இலங்கை ,வங்கதேசம், மியான

Apr06

தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட

Jan19

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண