More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மின்னியல் தகனசாலை ஒன்றை நிறுவுமாறு கோரிக்கை விடுத்து மட்டு மாநகர முதல்வருக்கு கடிதம்!
மின்னியல் தகனசாலை ஒன்றை நிறுவுமாறு கோரிக்கை விடுத்து மட்டு மாநகர முதல்வருக்கு கடிதம்!
Sep 06
மின்னியல் தகனசாலை ஒன்றை நிறுவுமாறு கோரிக்கை விடுத்து மட்டு மாநகர முதல்வருக்கு கடிதம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில்  கொரோனாவினால் உயிரிழ்தவர்களின் உடல்களை தகனம் செய்ய பொலன்னறுவை மாவட்டத்துக்கு பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டியுள்ளது எனவே மாவட்டத்தில் மின்னியல் தகனசாலை ஒன்றை நிறுவுமாறு கோரிக்கை விடுத்து மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாறஞ்சனி மட்டு மாநகரசபை முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.



மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாறஞ்சனி கடந்த முதலாம் திகதி அனுப்பிவைத்துள்ள கடிதத்தில். தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல மரணங்கள் சம்பவித்துள்ளது இந்த வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்த 202  மரணங்களில் 27 உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டுள்ளது. 



இச் சடலங்கள் தகனம் செய்வதற்கு மட்டக்களப்பில் இருந்து 100 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள மின்னியல் தகனசாலைக்கு தகனம் செய்ய கொண்டு செல்லவேண்டியுள்ளது. 



அதேவேளை இவ்விடயம் தொடர்பாக பொலன்னறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பொது சுகாதார பரிசோதகர் ஆகியோரின் முன் அனுமதி பெறவேண்டியதுடன் மின்னியல் தகனம் மேற்கொள்வதற்காக திம்புலாகலை பிரதேச சபையிடமிருந்து அனுமதியைப் பெற்று அதன் பின்னரே குறித்த உடலத்தை தகனம்செய்ய அனுப்பவேண்டியுள்ளது. 



தகனம் செய்வதற்கு சடலம் ஒன்றை அனுப்புவதற்கு சடலத்தை ஏற்றிச் செல்வதற்கு ஒரு வாகனம் அச் சடலத்தினை இறக்கி உரிய தகனச்சாலைக்கு கொண்டு சென்று கொடுப்பதற்காக வைத்தியசாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக பிரிதொரு வாகனம் அத்துடன் இரு சாரதிகள் மற்றும் 6 உதவியாளர்கள் என ஆளணிகளும் ஒழுங்கு செய்யவேண்டியுள்ளது.



தற்போது காணப்படும் இந்த தொற்று நோய் காரணமாக வைத்தியசாலையின் ஊழியர்கள் வரவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால்  உரியநேரத்துக்கு உரிய உடல்களை தகனம் செய்வதற்காக அனுப்பி வைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையின் பிரேத அறையிலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகின்றது. 



எனவே நிலைமையை கருத்தில் கொண்டு எமது மாவட்டத்தில் மரணித்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு மின்னியல் தகனசாலை ஒன்றை நிறுவுவதற்கு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது   






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct16

ஐந்து இலங்கை மீனவர்களுடன் மீன்பிடிக் கப்பலொன்று இந்த

Oct04

உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்

Sep29

இலங்கையில் 80 வீதமான மக்கள் தொற்றா நோய்களினால் பாதிக்க

Jan19

நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சிறிகொ

Mar10

இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது

Aug07

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு

Oct08

இலங்கையில் இருந்து 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமா

Jul25

தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்

Mar24

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்து

Oct07

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளம

Oct13

ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார்

Jan24

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எ

Sep25

சாவகச்சேரியில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மற

Apr06

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பி

Aug16

வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக இருவர் மரணமடைந்துள