More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அவசரகால சட்ட வர்த்தமானியை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும் – சஜித் பிரேமதாஸ
அவசரகால சட்ட வர்த்தமானியை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும் – சஜித் பிரேமதாஸ
Sep 03
அவசரகால சட்ட வர்த்தமானியை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும் – சஜித் பிரேமதாஸ

ஜனநாயகத்தை வீழ்த்தி சர்வாதிகாரமிக்க பயணத்தை நோக்கி நகரும் அவசரகால சட்ட வர்த்தமானியை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும்.



நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமாயின் நுகர்வோர் பாதுகாப்பு உரிமை சட்டத்திற்கு அமைய செயற்படலாம். அதனை விடுத்து ஜனாதிபதி அவசரகால சட்டத்தை அவரமாக அமுல்படுத்தியுள்ளதன் நோக்கம் என்ன என  சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அறிக்கை வெளியிட்டுள்ளார்



அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,



அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு  அரசாங்கம் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் மற்றும் திறமையின்மையை மூடி மறைக்கும் தன்னிச்சையான  ஒரு செயற்பாடாக கருத வேண்டும்.



2003 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகாரச்சட்டத்தின்  மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க முடியும். ஆனால் அரசாங்கம் அதனை விடுத்து அவசரகால சட்டத்தை அவசரமான நிலையில் பிரகடனப்படுத்தியுள்ளமை  ஒரு ஆபத்தான நிலையை எடுத்துக்காட்டியுள்ளது.



ஜனநாயக கொள்கை மிக்க நாட்டை சர்வாதிகாரமிக்க நாடாக மாற்றியமைத்து மனித உரிமைகளுக்கு  சவால் விடுவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக உள்ளது என்பதை இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக விளங்கிக் கொள்ளலாம்.



அவசரகால சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தியிருப்பதால் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவடையாது. தடுப்பூசிகளையும் பெற முடியாது. பொருட்களின் விலையேற்றத்தையும், வெளிநாட்டு கையிருப்பின் அளவையும் கட்டுப்படுத்தாத அரசாங்கம்  நாட்டு மக்களை கட்டுப்படுத்த அவசரகால சட்டத்தை பயன்படுத்துகிறது.



ஜனநாயகத்தை வீழ்த்தி சர்வாதிகாரமாக பயணத்தை நோக்கி செல்லும் அவசரகால சட்ட வர்த்தமானியை ஜனாதிபதி மீளப் பெற வேண்டும். நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் உள்ளது. அச்சட்டத்திற்கு அமைய  சட்டவிரோதமாக பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். அவசரகால சட்டத்தை கொண்டு முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளையும் முற்றாக எதிர்ப்போம்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May29

இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா  தொற்றை கட்டுப்படு

Mar20

உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின்

Feb20

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற

Sep29

23 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வக

Feb03

இராணுவத்தை நோக்கி தாம் சுடவில்லை எனவும், தம்மை நோக்கி

Jul14

வவுனியா பல்கலைக்கழகமானது அடுத்து வரும் மூன்று வருட கா

Sep30

கிளிநொச்சி கரடி போக்கு சந்தியை அண்மித்த பகுதியில் புத

Apr10

வவுனியா - செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத

Mar07

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழ

Jan23

இலங்கைக்கு விஜயம் மேற்க் கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்

Oct06

மேல்இ சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, ந

Mar22

இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு தொகுதி அஸ்ட்ராசெனகா க

Feb02

வவுனியா – செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில

Aug05

வடக்கு மாகாணத்தில் மேலும் 130 பேருக்குக் கொரோனா வைரஸ் த

Feb06

இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்பதனால் எந்