More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • உடுமலை அருகே கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தம் மீட்பு!
உடுமலை அருகே கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தம் மீட்பு!
Sep 03
உடுமலை அருகே கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தம் மீட்பு!

உடுமலை அருகே கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தத்தை நேற்று வனத்துறை அதிகாரிகள் மீட்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரட்டூரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்த நிலையில் நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், யானைக்கு கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டதில், யானையை மர்மநபர்கள் கொன்று அதன் தந்தத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.



இதனை அடுத்து, கோவையில் இருந்து வரவழைத்த வனத்துறை மோப்பநாய் மற்றும் டிரோன் கேமரா மூலம் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்று வனத்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கரட்டூர் பகுதியில் உள்ள பாலத்தின் இடுக்கில் பதுக்கி வைத்திருந்த தந்தம் மீட்கப்பட்டது. இந்த தேடுதல் வேட்டையில் ஆனைமலை புலிகள் காப்பக உதவி இயக்குநர் கணேஷ் ராம் மற்றும் உடுமலை வனச்சரகர் தனபாலன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். மேலும், தந்தத்தை திருடிய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May01

கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணிய

Mar09

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழ

Jul05

தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சு

Aug12

சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்கள

Oct20

இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்

May16

அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப

Jul16

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய தகவல் தொழில்ந

Apr07

கோவை தெற்கு தொகுதியில், தாமரை சின்ன பேட்ஜ் அணிந்து வந்

Aug18

கேரளாவில்  கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட்

Jul27

கர்நாடக முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து எடியூரப்

Oct08

இந்திய விமானப்படையின் 89-வது தினம் இன்று கொண்டாடப்பட்ட

Jun24