More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • உடுமலை அருகே கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தம் மீட்பு!
உடுமலை அருகே கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தம் மீட்பு!
Sep 03
உடுமலை அருகே கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தம் மீட்பு!

உடுமலை அருகே கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தத்தை நேற்று வனத்துறை அதிகாரிகள் மீட்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரட்டூரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்த நிலையில் நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், யானைக்கு கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டதில், யானையை மர்மநபர்கள் கொன்று அதன் தந்தத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.



இதனை அடுத்து, கோவையில் இருந்து வரவழைத்த வனத்துறை மோப்பநாய் மற்றும் டிரோன் கேமரா மூலம் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்று வனத்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கரட்டூர் பகுதியில் உள்ள பாலத்தின் இடுக்கில் பதுக்கி வைத்திருந்த தந்தம் மீட்கப்பட்டது. இந்த தேடுதல் வேட்டையில் ஆனைமலை புலிகள் காப்பக உதவி இயக்குநர் கணேஷ் ராம் மற்றும் உடுமலை வனச்சரகர் தனபாலன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். மேலும், தந்தத்தை திருடிய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb12

பிரதமர் நரேந்திர மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முட

Jun09

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 

பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதை அட

Jun26

கேரளாவில் கொரோனா பரவல் விகிதம் படிப்படியாக குறைந்து வ

Sep15

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் பலத்தை நிச்சயமாக நிர

Sep02