More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நிதி நெருக்கடியின் காரணமாக அரசின் செலவீனங்களை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானம்!
நிதி நெருக்கடியின் காரணமாக அரசின் செலவீனங்களை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானம்!
Aug 31
நிதி நெருக்கடியின் காரணமாக அரசின் செலவீனங்களை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானம்!

அரசாங்கம் முகங்கொடுத்துள்ள பாரிய நிதி நெருக்கடியின் காரணமாக அரசின் செலவீனங்களை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கொவிட் பரவல் காரணமாக கடுமையான பொருளாதார சிக்கலுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளதால், அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.



இந்நிலையில், இவ்வருடத்துக்கு மீண்டெழும் செலவுகளை சமாளிப்பதற்காகவேனும் அவ்வருமானம் போதுமானதாக இல்லை என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அரசின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



இவ்வருடத்தின் மீண்டெழும் செலவீனங்கள் 2694 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டிருந்த போதிலும், தடுப்பூசி செலுத்தல், சுகாதார துறையின் நடவடிக்கைகளை விஸ்தரித்தல், நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளின் காரணமாக மீண்டெழும் செலவுகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அமைச்சரவைக்கு நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.



அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளின் அறிவுறுத்தலுக்கமைய குறித்த நிறுவன அதிகாரிகள் சுழற்சி முறையில் பணிக்கு அழைக்கப்படும்போது, அவர்களுக்காக வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுகளை, கடமைகளுக்காக வருகை தரும் தினங்களுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தும் வகையில் யோசனையொன்றை முன் வைக்குமாறு அமைச்சின் செயலாளர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.



இதேவேளை, இரசாயன கிருமிநாசினி இறக்குமதிக்காக விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துவது தொடர்பிலும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug25

சீன இராணுவத்தினரால், இலங்கை முப்படையினருக்கு 300,000 சைனோ

Feb05

73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை ச

Feb01

தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்

Feb04

இடது கை மற்றும் மார்பில் காயங்களுடன் கூடிய ஆணின் சடலம

Oct10

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் ஆரம்பித்துள்ள

May28

யாழ்.போதனா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை பிரிவில் அ

Mar28

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட த

Jul10

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 13 ஆம் திகதியுடன் பதவி வ

Jan27

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு (Sarat

Jul27

மூன்று தசாப்த கால கடின உழைப்பு மற்றும் இராணுவத்திற்கா

Sep29

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர

Sep21

'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்க

Feb25

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் சுகாதாரப்

Aug09

கொவிட் தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை

Sep26

ஹொரணை இலிம்ப பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை