யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்குமிடம் ஒன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த மோதல் தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில்.அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.