மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் காணாமல் போன 15 வயதுடைய சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது .
குறித்த, சிறுமியின் விபரங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில், அதனையறிந்த சிறுமி தனது தாயாரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சிறுமியின் தாயார் பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் சிறுமியிடம் வாக்குமூலம் பெற உள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.