More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கைக்கு ரூ.6,750 கோடி கடன் உதவி: இந்தியா இந்த மாதம் வழங்குகிறது!
இலங்கைக்கு ரூ.6,750 கோடி கடன் உதவி: இந்தியா இந்த மாதம் வழங்குகிறது!
Jan 04
இலங்கைக்கு ரூ.6,750 கோடி கடன் உதவி: இந்தியா இந்த மாதம் வழங்குகிறது!

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் இலங்கை நிதி நெருக்கடியில் தவிக்கிறது.

 



இந்த நிலையில், இந்தியாவிடம் அந்த நாடு உணவுப்பொருட்களும், மருந்து பொருட்களும் வாங்குவதற்கு 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7,500 கோடி) கடன் உதவியை நாடி உள்ளது.



ஆனால் இதற்கான ஆவணங்களை தயார் செய்வதற்கு அதிக காலம் பிடிக்கும் என தகவல்கள் வெளியாகின.



இது தவிர்த்து 900 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6,750 கோடி) கடன் உதவியையும், இந்தியாவிடம் இலங்கை நாடி உள்ளது. இது 2 கடன்களாக அமைகின்றன. அதில் ஒன்றாக 500 மில்லியன் டாலர் கடன் உதவி, கச்சா எண்ணெய் வாங்குவதற்கான கடனாகவும் கேட்கப்பட்டுள்ளது.



இதற்கிடையே இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே வரும் 10-ந் தேதி இரண்டாவது முறையாக டெல்லி வருவது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில், இலங்கைக்கு இந்தியா இந்த மாதம் 900 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6,750 கோடி) கடன் உதவியை வழங்க தயாராக இருப்பதாக இலங்கை பத்திரிகை ஒன்றில் தகவல்கள் வெளியாகி உள்ளன.



அதே நேரத்தில் இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இன்னும் விடுவிக்காத நிலையில் அந்த நாட்டுக்கு இந்தியா கடனுதவி வழங்க தயாராக இருக்கிறது என தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar21

நாள்தோறும் இலங்கையில் ஏதாவதொரு பொருளின் விலை பாரியளவ

Feb04

எதிரிப் படைகளைத் தோற்கடிப்பது போன்றே, கொரோனா – 19 தொற்

Sep22

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங

Feb25

அம்பாறை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து காவல்த்த

Oct01

யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுத

Jan26

ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்

Sep21

நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவையாளர்களுக்கு மா

Sep30

சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்திற்கான விருது வழங்கும்

Oct24

2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற

Sep06

தமது வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங

Feb06

அக்கரைப்பற்றில் பிறந்து கல்முனையை வதிவிடமாகவும் கொண

Oct13

நீதிமன்ற உத்தரவினை மீறி மகிழடித்தீவில் நினைவுத்தூபி

Apr05


கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் நேற்று மாமனாரு

Jan19

நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமைய

Feb06

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோக