More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கனமழையால் போக்குவரத்து பாதிப்பு- மெட்ரோ ரெயிலில் ஒரே நாளில் 1.83 லட்சம் பேர் பயணம்!
கனமழையால் போக்குவரத்து பாதிப்பு- மெட்ரோ ரெயிலில் ஒரே நாளில் 1.83 லட்சம் பேர் பயணம்!
Jan 01
கனமழையால் போக்குவரத்து பாதிப்பு- மெட்ரோ ரெயிலில் ஒரே நாளில் 1.83 லட்சம் பேர் பயணம்!

சென்னையில் நேற்று முன் தினம் பகலில் திடீரென்று கனமழை பெய்தது. காலை முதலே மழை தூறிக்கொண்டே இருந்தாலும் பகல் 2 மணிக்கு பிறகு மிக கனமழை பெய்தது.



சென்னை மெரினா கடற்கரையில் அதிகபட்சமாக 24 செ.மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 21 செ.மீட்டர் மழையும் பெய்தது. இதனால் சில மணி நேரத்தில் சென்னை நகரம் வெள்ளக்காடானது.



சாலைகளில் அதிக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் திடீரென்று வாகன போக்குவரத்து முடங்கியது. சென்னை நகரில் உள்ள அனைத்து சாலைகளிலுமே வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மணிக்கணக்காகியும் நின்ற இடத்தை விட்டு வாகனங்கள் நகரவில்லை.



இதனால் காலையில் அலுவலகத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியவர்கள் திணறினார்கள். பலர் வாகனங்களை அலுவலகத்திலேயே போட்டு விட்டு மெட்ரோ ரெயில், மின்சார ரெயில்களில் பயணம் செய்தனர். சென்னை விமான நிலையம்-விம்கோ நகர், பரங்கிமலை-சென்ட்ரல் இடையே இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களில் வழக்கமாக 1.25 முதல் 1.28 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர்.



கனமழை காரணமாக பஸ் போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்தனர். இதனால் மெட்ரோ ரெயிலில் அதிக அளவு கூட்டம் குவிந்தது. நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 321 பேர் பயணம் செய்தனர்.



கடந்த 29-ந் தேதி ஒரு லட்சத்து 28 ஆயிரம் பயணிகள் பயணம் செய்து இருந்த நிலையில், 30-ந் தேதி 30 சதவீதம் பயணிகள் அதிகமாக பயணம் செய்தனர்.



பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு அங்கு நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன. அன்று மட்டும் சுமார் 6 லட்சம் பயணிகள் மின்சார ரெயில்களில் பயணம் செய்தனர்.

 



மேலும் புறநகர் மின்சார ரெயில்களிலும் அதிக அளவு மக்கள் பயணம் செய்தனர். அன்று மட்டும் 40 ஆயிரம் பயணிகள் கூடுதலாக மின்சார ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb12

சீனாவை எதிர்க்காமல் பிரதமர் மோடி விட்டுக் கொடுத்து வி

Jul04

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், செல்போன் ஒட்டுகே

Oct24
Feb11

சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை இந

Dec29

தமிழகத்தில்  வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாத

Jul09

கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ

Sep19

மியன்மார் தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகா

Mar14

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் த

Jan03

பீகார் அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை

Jan15

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் ராம்குமார்.

May28

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான

Mar20

உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரிக்கத் த

Mar24

நமது நண்பர் யார், எதிரி யார் என்பது இன்று தெரிந்து விடு

Jul16

நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி படு