More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மட்டு வடமுனை ஊத்துச்சேனை மக்கள் மணல் அகழ்வை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்!...
மட்டு வடமுனை ஊத்துச்சேனை மக்கள் மணல் அகழ்வை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்!...
Dec 27
மட்டு வடமுனை ஊத்துச்சேனை மக்கள் மணல் அகழ்வை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்!...

மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மற்றும் அனுமதி வழங்கிய ஆற்று மணல் அகழ்வை உடன் நிறுத்துமாறு கோரியும் வெலிகந்தையில் இருந்து ஊத்துச்சேனை பிரதேசத்துக்கான பிரதான வீதியை செப்பனிட்டுத்தருமாறு கோரி பிரதேச மக்கள் கொழும்பு பொலன்னறுவை பிரதான வீதியை மறித்து இன்று திங்கட்கிழமை (27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



குறித்த பிரதேசத்திலுள்ள எல்லைக்கிராமமான வடமுனை எல்.பி, ஊத்துச்சேனை வடமுனை ஆகிய பிரதேசங்களில் சுமார் 800 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் குறித்த பகுதியில் உள்ள மாதுறு ஓயா பகுதியில் ஆற்று மண் அகழ்வதற்கு அரசு அனுமதியளித்துள்ளனர்.



இருந்தபோதும் அதனை மீறி மீரான்ரவில் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து தினமும் 50க்கு மேற்பட்ட உழவு இயந்திரத்தில் எடுத்துக் கொண்டு செல்வதால் ஊத்துச்சேனை பாலத்தில் இருந்து வெலிகந்தை சந்தி வரையான வீதி பழுதடைந்துள்ளதுடன் அந்த வீதியால் நடந்து கூட செல்லமுடியாத நிலை நீண்டகாலமாக இருந்து வருகின்றது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறைப்பாடு தெரிவித்தும் பலன் எதுவும் கிடைக்காத நிலையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். 



இதனையடுத்து ஊத்துச்சேனை வடமுனை பாலத்தில் ஒன்று திரண்ட மக்கள் மற்றும் வெலிகந்தை விகாரை விகாராதிபதி கோவில் பூசாரி உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் காடுகளுக்குள் உழவு இயந்திரங்களில் மணல் அகழ்வில் ஈடுபடுவதால் காட்டுயானைகள் குடியிருப்புக்களை சேதப்படுத்துகின்றது. வடமுனை கிராமசேவகர் பிரிவில் மணல் அகழ்வை இரத்து செய், சட்டவிரோத மணல் அகழ்வை நிறுத்தவேண்டும். மணல் அகழ்வு என்ற போர்வையில் மரக்கடத்தல் இடம்பெறுகின்றது. போன்ற கோஷங்களை எழுப்பியவாறு சுலோகங்களை ஏந்தியவாறு  வெலிகந்தை சந்தி வரை ஆர்ப்பாட்ட ஊர்வலமாக சென்று கொழும்பு பொலன்னறுவை பிரதான வீதியை மறித்து வீதியில் உட்கார்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனையடுத்து அங்கு வந்த வெலிகந்தை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டகாரரிடம் பொலநறுவை பிரதேசத்திலுள்ள வீதியை செப்பனிட்டு தருவதற்கு உறுதியளித்ததையடுத்து ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகி மீண்டும் வடமுனை பாலத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு மணல் அகழ்வதற்கு சென்ற உழவு இயந்திரங்களை வடமுனை ஊத்துச் சேனை பகுதிக்கு செல்லவிடாது தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பியதுடன் மணல் அகழ்வை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து அங்கிருந்து விலகிச் சென்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul20

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம்

May02

இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொது

Jul17

கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி நேற்று மாலை முதல் 14

Mar26

நீண்ட நாட்களாக ஒத்தி வைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமி

Mar11

கொழும்பு - கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித

Sep08

தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வ

Mar04

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தான் விரும்பியவாறு ஜனாதிப

Mar13

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், கொள்வனவு

Jul08

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பத

May03

இந்திய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி வழங்கும் 200 மி

Jul06

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 343 ப

Jan19

வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய

Jul18

பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று  ந

Feb03

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கும் புதுப

Mar05

பேராதனை வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் பயணித