சிங்கராஜ வனத்தின் அளுத் இல்லும பகுதியில் ஏலக்காய் பறிக்கச்சென்ற இரண்டு பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெபரன் சைட் இத்தகந்த பிரதேசத்தில் வசிக்கும் 39 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
மேலும் பொலிஸார், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.