More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கேதார்நாத் சிவன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு!
கேதார்நாத் சிவன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு!
Nov 05
கேதார்நாத் சிவன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.400 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று காலை டேராடூன் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு, அம்மாநில ஆளுநர் குர்மித் சிங், முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். 



இதையடுத்து, கேதார்நாத் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு நடத்தினார். சிவபெருமானுக்கு ஆரத்தி காண்பித்து தரிசனம் செய்தார்.



கடந்த 2013ம் ஆண்டு கேதார்நாத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள 12 அடி உயர ஆதி சங்கரரின் சிலை அடித்து செல்லப்பட்டது. ஆதி சங்கரர் சமாதியும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, 2019ம் ஆண்டு முதல் அங்கு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு 12 அடி உயர, 35 டன் எடைக் கொண்ட ஆதி சங்கரரின் சிலையை  பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.



 



மேலும், கேதார்நாத் கோவிலில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளையும் மோடி ஆய்வு செய்தார். இதேபோல்,  மந்தாகினி ஆற்றில் பாலம், தடுப்புச் சுவர், புரோகிதர்களுக்கான வீடுகள், விருந்தினர் மாளிகைகள், மருத்துவமனை உள்பட ரூ.400 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov12

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னையி

Apr05

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ண

Sep25

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை சம்

Aug27

இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக இலங்கை தமிழர்கள் ஏரா

Apr07

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில

Jun20
Jan19

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாம

Feb02

கிம்புலாஎல குணா என அழைக்கப்படும் இலங்கையை சேர்ந்த பாத

Jan28

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றி

Jul18

சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ள

Sep20

எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத

Mar07

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள

Jan18

ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்

May01

கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணிய

Oct03

சொகுசு கப்பல்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் அடிக்கட