இந்தியாவில் புதிதாக 11,903 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 6,444 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 8 ஆயிரத்து 140 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 187 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 311 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,59,191 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,40,274 பேர் அடங்குவர்.
கொரோனாவின் பிடியில் இருந்து மேலும் 14,159 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 36 லட்சத்து 97 ஆயிரத்து 740ஆக உயர்ந்தது.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1,51,209 ஆக சரிந்துள்ளது. இது கடந்த 252 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 41,16,230 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 107 கோடியே 29 லட்சத்தை கடந்தது.