More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • முன்னாள் மன்னரை கொலை செய்ய இளவரசர் சல்மான் முயன்றார்: அதிர்ச்சி தகவல்..
முன்னாள் மன்னரை கொலை செய்ய இளவரசர் சல்மான் முயன்றார்: அதிர்ச்சி தகவல்..
Oct 26
முன்னாள் மன்னரை கொலை செய்ய இளவரசர் சல்மான் முயன்றார்: அதிர்ச்சி தகவல்..

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆனால் சவுதி அரேபியா அரசு இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.



இந்தநிலையில் மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவை, இளவரசர் முகமது பின் சல்மான் அதிகாரத்துக்காக கொலை செய்ய திட்டமிட்டதாக அந்நாட்டின் முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர் கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சவுதி அரேபியாவில் இருந்து தப்பி கனடாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் புலனாய்வு அதிகாரியான அல்ஜாப்ரி என்பவர் அமெரிக்க செய்தி நிறுவனத்தின் நேர்காணலின்போது இதனை தெரிவித்தார். நேர்காணலில் அவர் கூறியதாவது:-



சவுதி இளவரசர் குறித்த பல ரகசியங்கள் என்னிடம் உள்ளன. மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவை அதிகாரத்துக்காக கொல்ல இளவரசர் திட்டமிட்டார். இதற்காக ரஷியாவிலிருந்து விஷம் பொருந்திய மோதிரத்தை வாங்கினார். இதன் மூலம் கைகுலுக்கி மன்னரை கொல்லவும் அவர் நினைத்தார்.



அந்த நேரத்தில், இளவரசர் முகமது பின் சல்மான் அரசில் எந்த மூத்த பங்கையும் கொண்டிருக்கவில்லை. எனினும் தனது தந்தையை அரியணையில் ஏற்றுவதற்காக மன்னரை கொல்ல நினைத்தார்.



இப்போது அவர் நான் கொல்லப்பட வேண்டும் என்று நினைக்கிறார். ஏனெனில் எனது தகவல்களால் அவர் அச்சமடைகிறார். நான் நிச்சயம் ஒரு நாள் கொல்லப்படலாம். நான் சாகும்வரை அவர் அமைதியாகமாட்டார்.

 



இவ்வாறு அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May21

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களுக்கும் இடை

Jan25

தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்ச

Mar28

மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந

Jun09

பிரித்தானியப் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும்

Mar30

புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (29) திடீரென ரோமில் உள

Mar03

ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்

Jan26

நெதர்லாந்தில் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக  நீடி

Apr02

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Oct28

அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்

Jan06

சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள பியூன் உயிரியல்

Apr06

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசின் தலைநகர் வியன்டியனில்

Mar06

போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதல் நடத

Oct21

இந்தோனேசியாவில் சிரப் மற்றும் மருந்து  திரவங்களால்

May29

சீனாவின் அவசரகால டீசல் விநியோகத்தை மீண்டும் செயற்படு

Feb17

இதற்கமைய இனி வெறுப்பூட்டும் விதமாக பேசுவோரை தடை செய்ய