More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பாகிஸ்தானை தொடர்ந்து கிரே பட்டியலில் துருக்கியும் சேர்ப்பு!
பாகிஸ்தானை தொடர்ந்து கிரே பட்டியலில் துருக்கியும் சேர்ப்பு!
Oct 23
பாகிஸ்தானை தொடர்ந்து கிரே பட்டியலில் துருக்கியும் சேர்ப்பு!

பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதை தடுத்து, சர்வதேச நிதி அமைப்பிற்கான அச்சுறுத்தல்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக எப்ஏடிஎப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. 



பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை இந்த அமைப்பு, கருப்பு பட்டியல் மற்றும் கிரே பட்டியல் என இரு வகைகளாக பிரிக்கிறது. 



கருப்பு பட்டியலில் உள்ள நாடுகள், ஒத்துழைக்காதவை என வகைப்படுத்தப்பட்டு, அதனுடன், நிதி தொடர்பான எந்த பரிமாற்றத்தையும் உலக நாடுகள் வைத்துக்கொள்ளாது. கிரே பட்டியலில் உள்ள நாடுகள், எந்த நேரத்திலும், கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படலாம் என்ற எச்சரிக்கையுடன் வைக்கப்படுகின்றன.



இதற்கிடையே, பயங்கரவாத  நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF)பாகிஸ்தானைத் தொடர்ந்து சாம்பல் பட்டியலில் தக்கவைத்துள்ளது. மேலும்  அதன் நட்பு நாடான துருக்கியையும் தற்போது  சாம்பல் பட்டியலில் சேர்த்து உள்ளது. இது பாகிஸ்தானுக்கு இரட்டை அடியாக உள்ளது. 



இதற்குமுன், கருப்பு பட்டியலில் நுழைவதைத் தவிர்க்க துருக்கி ஆதரவை பாகிஸ்தான் பெற்று இருந்தது. மேலும், ஜோர்டான் மற்றும் மாலி ஆகியவையும் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்பட்டன.



இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பயங்கரவாத  நிதி நடவடிக்கை பணிக்குழு தலைவர் மார்கஸ் பிளேயர் கூறியதாவது:



லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, அல் கொய்தா மற்றும்  தலிபான் போன்ற அமைப்பினருக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இதனால் அந்நாட்டை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். பாகிஸ்தானைப் போல ஜோர்டான், மாலி மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் சாம்பல் பட்டியலில் இருக்கிறது என குறிப்பிட்டார்.



மேலும், பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் வைத்திருக்க இந்திய அழுத்தத்தின் கீழ் செயல்பட்டதாக கூறப்படுவதை எப்ஏடிஎப் மறுத்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun25

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, கென்யா. அந்த நாட்டின் 23 ராண

Jun08

கனடாவில் முஸ்லிம் குட

Mar16

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புக

Jun10

 நாட்டின் 22 வீதமான மக்களுக்கு 

கொரோனாத் தொற்றின் நெருக்கடிக்கு மத்தியிலும் போர்த்த

Jan27

உலகளவில் தற்போது 100,839,430 பேருக்கு கொரோனா வைரஸ்

Mar30

இதுவரை 40 கொலைகள் செய்துள்ள ரஷ்யாவின் பெண் ஸ்னைப்பர் ஒர

Apr09

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 45 நாளாகிறது. பல்வேறு ந

Mar12

இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் சுபாங் என்ற இ

Jul13