More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தளர்வுகளற்ற முழு ஊரடங்கு… சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!
தளர்வுகளற்ற முழு ஊரடங்கு… சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!
May 24
தளர்வுகளற்ற முழு ஊரடங்கு… சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் 24ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சென்னையில் ஊரடங்கை தீவிரமாக கண்காணிக்கும் பொருட்டு, ஒரு காவல் நிலையத்தில் இருந்து மற்றொரு காவல் நிலையத்திற்கு செல்ல இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. சுமார் 153 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.



தடையை மீறி வெளியே சென்ற வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் சென்னையில் பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்தது. இருப்பினும், முற்றிலுமாக பாதிப்பு குறைய வில்லை. இத்தகைய சூழலில் இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.



முழு ஊரடங்கை கண்காணிப்பது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவிட்ட சென்னை காவல் ஆணையர், ட்ரோன்கள் மூலம் ஊரடங்கை கண்காணிக்க அதிரடியாக உத்தரவிட்டார். மேலும், தடைகளை மீறி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் அந்த வாகனங்கள் ஊரடங்கு முடிந்தவுடன் நீதிமன்றங்களில் சென்றே பெறவேண்டும் என்றும் தெரிவித்ததோடு மக்கள் முழு ஊரடங்கை பின்பற்றி காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்

Apr18

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவ

Oct31

முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான

Apr23

இலங்கை உள்நாட்டு போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்

Aug18

சமையல் சிலிண்டர் விலை மாதந்தோறும் உயர்ந்து வரும் நிலை

Mar03

புல்லாங்குழலை ஊதினால்தான் இசைபிறக்கும். ஆனால், காற்றி

Feb27

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிகழ

Jul31

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள்

Jun29

இமாசல பிரதேசத்தின் சிர்மார் மாவட்டத்தில் பேக் பசோக் க

Mar13

பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளக் கட்டுமான பொருட்களை ஏற்

Feb08

கணவரின் வன்கொடுமை தாங்கமுடியாமல் மனைவி 8 வருடமாக சாப்

Oct26

தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் சென்னைக்க

Nov21

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் க

Feb04

ஒன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்பவர்

Jun17

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுசில் அரி இன்டர்நே&