More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மராட்டியத்தில் மீண்டும் ஓட்டல், மால், மார்க்கெட்டுகள் மூடப்படுகிறது!
மராட்டியத்தில் மீண்டும் ஓட்டல், மால், மார்க்கெட்டுகள் மூடப்படுகிறது!
Feb 28
மராட்டியத்தில் மீண்டும் ஓட்டல், மால், மார்க்கெட்டுகள் மூடப்படுகிறது!

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சில மாநிலங்களில் மட்டும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.



மராட்டியம், குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து நோய் பரவல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும் மராட்டியம் மாநிலத்தில் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.



கடந்த ஒரு வார காலமாக அங்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில்தான் அதிக பாதிப்பு இருந்த நிலையில் இப்போது தொடர்ந்து நோய் பரவல் உயர்ந்து வருவதால், அதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மராட்டிய அரசு எடுத்து வருகிறது.



இதன்படி பல மாவட்டங்களில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. விதர்பா பிராந்தியத்தில்தான் அதிக பாதிப்பு உள்ளது. அங்கு 5 மாவட்டங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பல இடங்களிலும் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.



அடுத்ததாக ஓட்டல்கள், மார்க்கெட்டுகள், மால்கள் ஆகியவற்றை மூடுவதற்கு திட்டமிட்டு இருப்பதாக மாநில மந்திரி விஜய் வேதித்துவார் கூறினார்.



மேலும் அவர் கூறும்போது, ‘‘ஏற்கனவே மக்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறோம். அடுத்ததாக மேலும் மக்கள் கூடம் இடங்களிலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர இருக்கிறோம். விடுதிகள், ஓட்டல்களின் செயல்பாடுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.



சாலைகளில் வாகன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் ரெயில்களின் எண்ணிக்கையையும் குறைப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது’’ என்று கூறினார்.



கல்வி மந்திரி உதய் சமந்த் கூறும்போது, ‘‘கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து இருப்பதால், கல்விதுறையிலும் பல நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறோம். மாணவர்களின் பரீட்சைகளையும் ஆன்லைனில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது’’ என்று கூறினார்.



தற்போது அகோலா, அமராவதி, யவத்மால், புல்தானா, வாசிம் ஆகிய மாவட்டங்களில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அகோலா மாவட்டத்தில் ஒரே நாளில் 1,364 பேரை நோய் பாதித்து இருக்கிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul07

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்த

Mar25

தமிழகம் வரும் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய

Feb24

 உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு தாயகம் அழைத

Sep18

பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸ் அர

Mar12

தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது செ

Sep20

தாம் உயிருக்கு உயிராக நேசிக்கும் அரசியல் தலைவர் அபிமா

Oct24

இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழ

May16

பஞ்சாபின் லூதியானாவுக்கு அருகே உள்ள ஜக்ரானில் குற்றப

Mar31

தமிழக சட்டமன்ற வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது தேர

May11

வளிமண்டல சுழற்சி காரணமாக குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்க

Apr19

மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குப

Jun03

ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்த

Feb27

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் ந

Jul29

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பா

Feb22

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்ப