More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 22-ந் தேதி, 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: மந்திரி சுரேஷ்குமார்!
22-ந் தேதி, 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: மந்திரி சுரேஷ்குமார்!
Feb 20
22-ந் தேதி, 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: மந்திரி சுரேஷ்குமார்!

கர்நாடகத்தில் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் வருகிற 22-ந் தேதி திறக்கப்படுகின்றன. இதையொட்டி பள்ளி கல்வித்துறை, பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது



6-ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்கள் வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டு வரலாம். குடிநீரும் கொண்டு வர வேண்டும். சாப்பிடும் இடத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் அனைத்து குழந்தைகளும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரையில் மட்டும் வகுப்புகளை நடத்த வேண்டும்.



பெங்களூரு மற்றும் கேரள மாநில எல்லையில் உள்ள பள்ளிகளில் 8-ம் வகுப்பு மட்டும் தொடங்கப்படுகிறது. 6, 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு வித்யாகம வகுப்புகள் மட்டும் வழக்கம் போல் வாரத்தில் 3 நாட்கள் நடத்தப்படும். மாணவர்கள் முதல் நாளில் தங்களின் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதத்தை பெற்று வர வேண்டும். பள்ளிகளில் சில குறிப்பிட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.



அரசு பள்ளி-கல்லூரி விடுதிகளும் திறக்கப்படுகின்றன. அங்கு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதலை கட்டாயம் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் வருகையை பதிவு செய்வது வருகிற மார்ச் மாதம் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.



இவ்வாறு மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb24

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன

Feb26

2007-ம் ஆண்டில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வ

Aug01

புதுச்சேரியில் தினசரி கொரோனா  பரவல் 100-க்கு கீழ் குறை

Jul25

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக் யூன

Jul07

பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட

Apr25

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெ

Aug09

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பலர் தயங்

Jul01