More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து- உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து- உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!
Jan 25
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து- உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!

இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமைக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.



உலகில் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி மருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி மருந்துகளை உருவாக்கியுள்ளன. அதேபோல இந்தியாவும் தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.



அந்தவகையில் தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில் கடந்த 16ஆம் திகதி முதல் பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.



இதேவேளை  பிரேசில், வங்காள தேசம், பக்ரைன், பூட்டான், மாலைத்தீவு, மொரீசியஸ், மங்கோலியா, மொராக்கோ, மியான்மர், நேபாளம், ஓமன், சிசெல்லஸ், இலங்கை ஆகிய 13 நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி மருந்தை ஏற்றுமதி செய்கின்றது.



அதில் மாலைத்தீவு, பூட்டான், வங்காளதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இலவசமாகவும் மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு பல நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பி உதவி செய்து வருவதால், உலக சுகாதார நிறுவனம் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.



இவ்விடயம் தொடர்பாக  உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ் அதோனம் வெளியிட்டுள்ள செய்தியில், ”பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்கி உதவி செய்து வருவதற்காக இந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உதவுவதாலும் தகவல்களை பரிமாறிக் கொள்வதாலும்தான் கொரோனாவை ஒழிக்க முடியும். மக்களுக்கு நல்வாழ்வு அளிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

பீகாரில் திருமணம் ஆகாத பெண்களுக்கான கல்வி உதவித் தொகை

Oct17
Jan14

சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்த

Jul01

கொரோனா பரவல் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்

Apr10

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்

Mar21

அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 6 சிலிண்டர் இலவசமாக வழங்

Feb19

கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள

Mar29

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலைச் சேர்ந்தவர் துரைரா

Jul22

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல சர்ச்சைகள் வ

Mar13

சாத்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர

Sep26

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்

Mar26

ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டத்தில் நேற்று பகலில் ராண

Apr08

முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகா

Feb17

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த தேவாரம் டி.மீனாட்சி

Mar30

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை நொளம்பூர் பகுதியி