தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளார்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்டார். முன்னதாக அவருக்கு இரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “908வது நபராக கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்டேன். தமிழகத்தில் 42 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறைவாகவே கோவாக்சின் போடப்படுகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்தவே அதனை போட்டு கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசுக்கு எதிராக இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து உள்ளன. கடந்த 16ம் திகதி இந்த தடுப்பூசிகள் போடும் முதல்கட்ட நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.