2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க முடிவெடுத்த பின்னர், பாடசாலை விடுமுறை நாட்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
2022ஆம் ஆண்டுக்கான தராதர சாதாரண தரப் பரீட்சை மே 29ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 8ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி புதிய விடுமுறை திகதி பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.