More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • நரபலி கொடுப்பதற்கு சிறுமி கடத்தல்- டெல்லியில் 2 பேர் கைது
நரபலி கொடுப்பதற்கு சிறுமி கடத்தல்- டெல்லியில் 2 பேர் கைது
Mar 16
நரபலி கொடுப்பதற்கு சிறுமி கடத்தல்- டெல்லியில் 2 பேர் கைது

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள சிஜர்சி என்ற கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 13-ந்தேதி திடீரென மாயமானார்.



இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.



போலீசார் மாயமான சிறுமியை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். கிராமத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.



இந்தநிலையில் டெல்லி பாக்பத் பகுதியில் சிறுமி இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர்.



போலீஸ் விசாரணையில் பக்கத்து வீட்டை சேர்ந்த சோனு பால்மிகி என்பவர் சிறுமியை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரையும், கூட்டாளி நீது என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.



விசாரணையில் நரபலி கொடுப்பதற்காக சிறுமியை கடத்தி சென்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. கைதான சோனு பால்மிகிக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் கைகூடவில்லை.



திருமணத்துக்கு தொடர்ந்து தடை ஏற்பட்டதால் சதேந்திரா என்கிற மந்திரவாதியை சந்தித்து தனது திருமண தடங்கல் பற்றி கூறினார். அப்போது மந்திரவாதி அவரிடம் ஹோலி பண்டிகையன்று நரபலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என யோசனை தெரிவித்தார்.



இதுபற்றி அவர் தனது நண்பரான நீதுவிடம் தெரிவித்தார். இதையடுத்து 2 பேரும் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிறுமியை கடத்தி நரபலி கொடுக்க முடிவு செய்தனர்.



சம்பவத்தன்று அவர்கள் சிறுமியிடம் நைசாக பேசி கடத்தி சென்றனர். டெல்லியில் உள்ள பாக்பத் பகுதியில் வசித்து வரும் தனது சகோதரி வீட்டுக்கு அந்த சிறுமியை சோனு பால்மிகி கொண்டு சென்று அடைத்து வைத்தார்.





சிறுமியை அங்கு வைத்து அவர்கள் நரபலி கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். அதற்குள் போலீசார் சிறுமியை மீட்டதால் நரபலி கொடுக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. இச்சம்பவத்தில் மந்திரவாதி சதேந்திரா உள்பட மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.



துரிதமாக செயல்பட்டு சிறுமியை மீட்ட போலீசாருக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என போலீஸ் கமி‌ஷனர் அசோக்சிங் தெரிவித்துள்ளார்.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov21

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிர

May22

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள

Oct18

புதுடெல்லி இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்ப

Jan01

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை மத்த

Jan19

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆ

Oct09

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி கார

Feb01

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையம் தொடர்பில் இந

Jul16

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள

Feb22

பேஸ்புக் மூலம் அறிமுகமாகி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து

Aug09

கேபினட் மந்திரிக்கு இணையான அந்தஸ்து வழங்கியதன் மூலம்

Apr04

அசாம் மாநிலத்தில் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் ஏப்ரல்

Aug08

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி திமு

Jun02

முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு ந

Jan30

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று

Dec19

கரூர் மாவட்டத்தில் ஆயிரத்து 72 அரசு மற்றும் தனியார் பள்