More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • அருள் வாக்கு சொன்ன சாமியார்... - அந்தரங்க உறுப்பை வெட்டி துண்டித்த இளம் பெண் - கேரளாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்
அருள் வாக்கு சொன்ன சாமியார்... - அந்தரங்க உறுப்பை வெட்டி துண்டித்த இளம் பெண் - கேரளாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்
Feb 23
அருள் வாக்கு சொன்ன சாமியார்... - அந்தரங்க உறுப்பை வெட்டி துண்டித்த இளம் பெண் - கேரளாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கங்கேசானந்தா சுவாமி. இவர் அப்பகுதியில் பல பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறி வந்தார். பலர் இந்த சாமியாரிடம் தங்களுடைய குறைகளையும், உடல் பிரச்சினைகளையும் கூறி வந்தனர்.



தங்களுடைய பிரச்சினைகளை சாமியார் தீர்த்து வைப்பார் என்று நம்பி இவரை தேடி படையெடுத்து மக்கள் வந்தனர். இதனால், அவரிடம் மக்கள் கூட்டம் குவிந்து வந்தது.



கடந்த 2017ம் ஆண்டு ஒரு நள்ளிரவில் கங்கேசானந்தா சாமியாரின் அந்தரங்க உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் கீழே மயங்கி கிடந்தார். இதைப் பார்த்த பக்தர்கள் ஒரு சிலர் அதிர்ச்சி அடைந்தனர்.



இதனையடுத்து, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து, கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இந்த வழக்கில் பக்தையாக இருந்த பெண் ஒருவர் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அப்பெண், 'சாமியார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டதால் மர்ம உறுப்பை அறுத்தேன்' என போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.



இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.



சாமியாரிடம் பக்தையாக இருந்த அப்பெண், தன் காதலன் அய்யப்ப தாஸ் என்பவருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அதற்கு சாமியார் தடையாக இருந்து வந்துள்ளார்.



இதனால், ஆத்திரமடைந்த இருவரும் திட்டமிட்டு சாமியாரின் அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கில் அந்த இளம்பெண் மற்றும் அவரது காதலனை சேர்க்க, சட்ட ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul27

இந்தியாவில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பெரும் பாதிப்

Aug12

தனியார் மருத்துவமனைகளில் 

சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்ப

Jan15

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் ராம்குமார்.

Mar08

அதிமுக-வில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று த

Feb13

நாய்களின் மோப்ப சக்தி நம்முடைய கற்பனைக்கு எட்டாத ஒன்ற

Jul15

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.ச

Jun26

2021-22 கல்வியாண்டு முதல் M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாக&n

Oct04

மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டச

Jul11

குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, வரும் 15

Apr01

நாம் தமிழர் முன்வைக்கும் மாற்றம் என்பது அதிமுகவை அகற்

Jan25

இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மர

Jul07

திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா ஆவார். இவர் நேற்று தனத

Jun07

டெல்லியில், ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கும

Jul31

கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை