More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 4 ஆண்டுகள் பாஜக ஆட்சி நிறைவு - இமாச்சல பிரதேசத்தில் பிரதமர் மோடி உரை!
4 ஆண்டுகள் பாஜக ஆட்சி நிறைவு - இமாச்சல பிரதேசத்தில் பிரதமர் மோடி உரை!
Dec 27
4 ஆண்டுகள் பாஜக ஆட்சி நிறைவு - இமாச்சல பிரதேசத்தில் பிரதமர் மோடி உரை!

இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியின் 4 ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அம்மாநிலத்தின் மண்டி தொகுதிக்கு ஒரு நாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு ரூ.11,000 கோடி மதிப்பிலான நீர்மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிகல் நாட்டிய மோடி இவ்வாறு பேசினார்:-



இமாச்சல பிரதேசத்தில் 4 ஆண்டுகளை பாஜக அரசு நிறைவு செய்துள்ளது. ஒரு மாநிலத்திற்கு இரண்டு வகையான வளர்ச்சி மாதிரிகள் இருக்கிறது. ஒன்று, ‘அனைவருக்குமான அரசு, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவர் மீதான நம்பிக்கை’ என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டது.



மற்றொன்று ‘சுயநல அரசு, குடும்ப நல அரசு’ என்ற கொள்கையை கொண்டது. இமாச்சல பிரதேசத்தில் முதல் கொள்கையின் அடிப்படையில் நிறைய வளர்ச்சி திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. கொரோனா காலத்திலும் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் தடையில்லாமல் மக்களுக்கு சென்றடைய உழைத்துக்கொண்டிருக்கிறோம்.



இமாச்சல பிரதேசம் நாட்டின் மிக முக்கிய மருந்து தயாரிப்பு மையமாக திகழ்கிறது. கொரோனா காலத்தில் பிற மாநிலங்களுக்கு மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் உதவியுள்ளது. வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி திட்டத்தை அறிவித்துள்ளோம். 



ஜனவரி 10-ம் தேதி முதல் முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் முதியோர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தையும் தொடங்குகிறோம். இந்த திட்டங்களில் இமாச்சல பிரதேசம் முன்னோடியாக திகழும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.



இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar08

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற

Mar30

ராமேஸ்வரத்திற்கு நேற்று முன்தினம் மாலை வந்த சசிகலா தன

Oct14

மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசு கப்பலில் ப

Jul10

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவ

Apr03

மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிரா நவநிர்

Jan12

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுத

Feb25

குஜராத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம

Oct22

தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என உள்துறை அமை

Jan30

சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,30,982

Jul18

சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்ப

Oct03

தமிழகத்தில் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த மெகா தடுப

Jun07

40 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இ

Jul15

கிழக்கு லடாக்கில் பல இடங்களில் எல்லை கோட்டை தாண்டி சீ

Mar15

குமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டார் செட்டித்தெருவில

Oct10

இந்தியாவிலேயே முதன் முதலில் 146 ஆண்டுகளுக்கு முன்னர் தூ